கமல்ஹாசன் வீட்டுக்கு மின் இணைப்பு குடுத்துட்டாங்க !

கனமழையினால் நடிகர் கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலம் அமைந்திருக்கும் அழ்வார்ப்பேட்டை பகுதியில் ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது, மீண்டும் அவரது வீட்டிற்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கனமழையால் சென்னை அழ்வாரப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசன் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கடந்த வாரம் கனமழைக்கு சாலையில் விழுந்த மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றப்படமல் இருந்தது. இதனால் தான் இந்த பகுதியில் மின்சாரம் வழங்கவில்லை என்று மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது அப்பகுதி பொதுமக்களே மரத்தை அகற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன் அலுவலத்திற்கு தற்போது மின்சாரம் வந்துவிட்டதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் நிகில் உறுதி செய்து உள்ளார். வெள்ளம் ஏற்பட்டதில் சென்னையில் நிவாரண பணிகளில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். 

இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
Tags: