பாகிஸ்தான் சுதந்திர தினம்.. இந்திய ராணுவம் மீது தொடர் தாக்குதல்

பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில், அந்நாட்டுப்படைகள் ஜம்மு காஷ்மீரில் ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளன.


காஷ்மீரின் ஜம்மு, ரஜோரி, பூஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இதனால் நீண்டநேரம் இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியப் படைகளின் கவனத்தை திசை திருப்பி, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாளை நடைபெறும் சுதந்திர தினத்தை சீர்குலைக்குச் செய்வதற்காக பாகிஸ்தான் படைகள் தந்திரமாக செயல்படுவதாக கருதப்படுகிறது.
Tags: