சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !

சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘காக்கிச் சட்டை’ படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் சிவப்பு சந்தை, அதாவது, ‘ரெட் மார்க்கெட்’ என்கிற வார்த்தை உங்களுக்குப் பரி ச்சயம் ஆகியிருக்கும். 
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
பண்டங் களை விற்கும் சந்தை போல மனித உடலின் உறுப்புகளை விற்கும் சந்தையே சிவப்பு சந்தை.

உறுப்பு களை பறிப்பத ற்காக தொடர்பு டையவர் களைக் கடத்துவது, திட்ட மிட்டே ஒருவரை மூளைச் சாவுக்கு உட்படுத்தி உறுப்புகளை எடுப்பது என

சிவப்பு சந்தையை அடிப்படை யாக வைத்து இயங்கும் நிழல் உலகத்தை இப்படங்கள் காண்பி த்திருந்தன. மனித உடலில் மூளையைத் தவிர்த்து எந்த உறுப்புகள் செயலிழந்து விட்டாலும்

அதற்கு மாற்று உறுப்பினைப் பொருத்தி இயங்க வைக்க முடியும் என்கிற அளவுக்கு மருத்துவத் துறை வளர்ச்சி கண்டி ருக்கிறது.

2008ல், மூளைச் சாவு ஏற்பட்ட ஹிதேந்திரன் என்னும் 15 வயது சிறுவனின் இதயத்தை அபிராமி என்னும் 8 வயது சிறுமிக்குப் பொருத்தி உயிர் பிழைக்க வைத்த சம்ப வத்தை இதற்கு உதாரண மாகக் கூற முடியும்.
அன்னாசி அல்வா செய்வது எப்படி?
அதன்பிறகு அரசே உறுப்பு தானத்தை ஊக்கு வித்து `தமிழ்நாடு மூளைச் சாவு உடலுறுப்பு தான திட்ட'த்தை உருவாக்கி இருக்கிறது.

இதன் மூலம் மூளைச்சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று தேவைப் படுபவர்களு க்கு வழங்கும் பணியை மேற்கொ ள்கிறது.

இப்படி க் கிடைக்கப் பெறும் உறுப்பு களைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்வது சட்டரீதியானது.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
இதற்கு நேரெதிராக சட்டத்துக்கு புறம்பாக உறுப்புகளை வாங்கி அல்லது பறித்து விற்கும் சந்தை தான் சிவப்பு சந்தை. சிவப்பு சந்தை என்பது இன்றை க்கு நேற்று உருவா னதல்ல...

பல காலமாகவே இருக்கிறது என்றாலும் இப்போது தன் பரப்பை விரிவா க்கிக் கொண்டு ள்ளது.

சிறுநீரகம் என்பது ரத்தத்தைச் சுத்திகரித்து, கழிவுப் பொருட் களை வெளி யேற்றும் முக்கிய மான உறுப்பு என்பதை யெல்லாம் தாண்டி

பணத்தேவை கழுத்தை நெரிக்கும் போது விற்று காசு பண்ணுகிற ஒரு பொருளாகத்தான் அதை ஏழைகள் அறிந்திரு ந்தார்கள்.

எத்தனையோ பேர் சிறுநீர கத்தை விற்ற கதையையும், பறிகொ டுத்த கதையை யும் கேள்விப்பட்டி ருக்கிறோமே...
ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?
அதுதான் சிவப்பு சந்தை யின் ஆரம்ப கட்டம். தலைமுடி தொடங்கி ரத்தம், கண், இதயம், கணையம், கல்லீரல், கருமுட்டை, தோல், எலும்பு என

உடலின் அத்தனை அங்கங் களும் சிவப்பு சந்தையின் விற்பனைப் பொருட்கள் என்றால் அதிர்ச்சி கரமாக இருக்கிற தல்லவா?

இன்னும் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல் களைக் கொண்டு ‘The red market’ என்னும் நூலை எழுதியி ருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை யாளர் ஸ்கார்ட் கார்னி.

மேலை நாடுகளில் வாழும் மக்களின் உறுப்புத் தேவைக்கு இந்தியா போன்ற ஏழை நாட்டு மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கை கடுமை யாகச் சாடுகிறார் ஸ்கார்ட் கார்னி.

சிவப்பு சந்தை குறித்து எழுத வேண்டும் என அவர் எண்ணத் தொடங்கியதுமே உலகின் பல்வேறு நாடுக ளுக்கு பயணம் மேற்கொண்டு

ஆய்வின் மூலம் பல அதிர்ச்சி கரமான தகவல் களைக் கண்டறிந்து, எவ்வித சமரசங்க ளுமின்றி உண்மை நிலையைப் பதிந்தி ருக்கிறார்.
கேழ்வரகு அல்வா செய்முறை !
சிவப்பு சந்தை குறித்து மிக ஆழமாக பதிவு செய்யப் பட்டிருக்கும் ஒரே நூலான ‘The red market’ நூலின் சில முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம்.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
திருப்பதி வெங்கடேச பெரு மாளுக்கு தலைமுடியை காணிக்கையாகக் கொடுப்ப தென்பது பலரது வேண்டு தலாக இருக்கும்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில் காணிக்கை தரப்படும் தலை முடிகள் என்ன வாகின்றன?

அவை அமெரிக் காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகின்றன என்கிற பதில் கிடைக்கும்.
உளுந்து அல்வா செய்முறை !
தலை முடியை வைத்து என்ன செய்ய முடியும் என்கி றீர்களா? ஆண்களின் தலைமுடி பேக்கரியில் பயன் படுத்தும் ஒரு வித ரசாயனப் பொருள் செய்வ தற்கும்,

பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் புர்பஸ்தலி என்னும் ஊரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் மூடப் பட்டது.

அந்நிறு வனம் எதை ஏற்றுமதி செய்தது தெரியுமா? அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்குத் தேவைப்படும் மனித எலும்புகளை.

இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டுக்கு 2 முதல் 5 கோடி வரை வருமானத்தை ஈட்டியது. 

தங்களது நிறுவன ஊழியர்கள் சுற்றுவ ட்டாரத்தில் உள்ள சுடுகாடு களில் பிணங்கள் வருகிறதா என்று நோட்டம் விடுவார்கள். பிணத்தை புதைத்தால் தோண்டி எடுத்து விடுவர்.

எரித்தார்கள் என்றால் உறவினர் சென்ற பின் பாதி எரியும் போதே அணைத்து பிணத்தைத் தூக்கி விடுவர்.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
இப்படியாக தூக்கி வரும் பிணத்தி லிருந்து பதப்படுத்தி எலும் புகளை மட்டும் எடுப்பார்கள். அதனை சுத்தமாக பாலீஷ் செய்து அமெரிக்க பல்கலைக் கழகத்துக்கு ஏற்றுமதி செய்து விடுவர்.

அமெரிக்கா, ஐரோப் பாவில் உறுப்பு திருட்டுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டு கொள்வ தில்லை.
நீதிபதி முன் மார்பகங்களை காட்டிய பெண் ஆராய்ச்சியாளர் !
கடலோர வாசிகளின் வாழ்க் கையையே கவலைக் கிடமாக்கியது 2004ம் ஆண்டு சீற்றம் கொண்ட ஆழிப்பேரலை.

வாழ்வா தாரத்தைச் சுழற்றிப் போட்ட அந்த அலையின் காரணமாக கடலோர கிராமங் களைச் சேர்ந்தவர் களுக்குத் தெரிந்த ஒரே பொருளா தாரத் தீர்வு கிட்னியை விற்பது தான்.

சென்னை மண லிக்கு அருகில் இருக்கும் சுனாமியால் சுழற்றியடி க்கப்பட்ட ஒரு குப்பத்தின் பெயர் `கிட்னிவாக்கம்'.

ஏனெனில், இங்கு குழந்தை களைத் தவிர அனைவருமே தங்களது ஒரு கிட்னியை விற்றுள்ளனர். இதே காரணத்து க்காகவே சென்னை வில்லிவா க்கத்தையும் `கிட்னி வாக்கம்' என்று குறிப்பிடு கின்றனர்.

இதில் கொடுமை என்ன வென்றால் 5 லட்சம் தொடங்கி 15 லட்சம் வரை விலை போகும் கிட்னியை கொடுப்பவருக்கு தரப்படும் தொகை வெறும் 50 ஆயிரம் ரூபாய் தான்.
உங்கள் கால்கள் கருப்பாக உள்ளதா?
அதிலும் மருத்துவச் செலவு, கமிஷன் என்று கூறி, 10 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு 40 ஆயிரத்தை த்தான் தருகி றார்கள்.

கிட்னியை கொடுத்த ஏழைக ளைக் காட்டிலும் அதை எடுத்து விற்கும் இடைத் தரகர்களே அதிக வருமா னத்தை ஈட்டுகி றார்கள் என்பது வேதனை க்குரியது.

ரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் ரத்தம் கொடுக்க பணம் வசூல் செய்யலாம் என்று சட்டமே இருக்கிறது.

இதை அடிப்ப டையாக வைத்து, கோரக்பூரில் ஒருவர், 4 பேரைக் கடத்திச் சென்று, அவர்க ளுடைய ரத்தத்தை உறிஞ்சி விற்பனை செய்து கொண் டிருந்தார்.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
அவர் கைது செய்யப் பட்டாலும் பண வலிமை யால் விடுதலை யாகி விட்டார். மேலை நாடுகளில் பணம் படைத்தவர்கள் உயிர் வாழ வேண்டு மெனில்

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களின் உறுப்புகளை வெகு சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஏழை மக்களின் உடல் என்பது விற்பனை க்கான பண்டமாக த்தான் பார்க்கப் படுகிறது. என்கிற பணக்கார வர்க்கச் சிந்தனை பற்றி தெளிவாக எடுத்துரை க்கிறார் ஸ்கார்ட் கார்னி.

எந்தப் பொருளு க்குத் தேவை அதிகம் இருக்கிறதோ, அதற்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும்.
35 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கீங்களா?
இதயம், கணையம், கல்லீரல் என எந்த உறுப்பாக இருந்தாலும் சிவப்பு சந்தை யில் அது நல்ல விலை யுடைய ஒரு பண்டம் தான்.

பணம் என்கிற சக்திதான் இச்சந்தையை இயக்கு கிறது, இதில் ஈடு படுகிறவர்கள் பணத்து க்காக தங்களது மனிதத் தன்மையை இழந்து விடுகின்றனர்.

இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இருந்து நல்ல உடல் வள த்துடன் இருக்கும் ஒருவரது மதிப்பு ஒரு கோடி ரூபாய்.

இப்படியாக ஒவ்வொரு மனித ர்களின் மதிப்பையும் அளவிடக் கூடிய அளவுக்கு வளர்ந்திரு க்கிறது இந்த சிவப்பு சந்தை.

சில ஆயிரங்க ளுக்காக குற்றச் செயலில் ஈடுப டுவோர் இருக் கையில் லட்சங் களை வாரி த்தரும் தொழில் எனும் போது இதற்கும் பலர் கடை விரித்து வியா பாரத்தைச் சத்தமின்றி நடத்திக் கொண்டி ருக்கின்றனர்.

மாற்று உறுப்பு தேவை ப்படும் வெளி நாட்டவர் டூரிஸ்ட் விசாவில் இங்கு வந்து மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டு செல்கி ன்றனர்.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
அவர்களது நாட்டைக் காட்டிலும் அறுவை சிகிச்சை க்கான செலவுகளும் இங்கு குறைவு...

அங்கு கிடைக்காத ஏழை மக்களின் உறுப்புகள் இங்கு கிடைக்கும். சட்டத் துக்குப் புறம்பாக உறுப்புகளுக்காக நடை பெறும் சிவப்பு சந்தை யைப் பற்றி பார்த்தோம்.

சட்ட ரீதியாக உறுப்பு தானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் உறுப்புகளின் நிலை என்ன?

சட்டரீ தியாகவோ, சட்டத்துக்கு புறம் பாகவோ எவ்வழியில் உறுப்புகள் பெறப் பட்டாலும் அதன் மூலம் பயனடை கிறவர்கள் பணம் படைத்த வர்கள் தானே அன்றி ஏழைகளல்ல...
சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது தெரியுமா?
இன்றைய சூழலில் அரசு மருத்துவ மனையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு ஏழை நோயாளி, கல்லீரல் செயலி ழப்புக்கு ஆளாகிறார் என்றால்

சாவதைத் தவிர, அவருக்கு வேறு வழியே இல்லை. அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை.

உறுப்பு தானத் திட்டத்தின் மூலம் பெறப்படும் உறுப்புகள் பெரும்பாலும் தனியார் மருத்துவ மனைக ளுக்கே வழங்கப் படுகின்றன

என்கிற குற்றச் சாட்டை முன் வைக்கிறார் சுகாதார உரிமை செயல் பாட்டாளர் ஆனந்தராஜ்.

‘மூளைச் சாவில் உயிரிழந் தவர்களின் உறுப்புகளை தானமாகப் பெற்று தேவையுடை யவர்களுக்குப் பொரு த்தலாம் என்பது ஆகச்சிறந்த திட்டம்.

இருந்தும் இத்திட்ட த்தினால் தனியார் மருத்துவ மனைகள் கொள்ளை லாபம் பார்க்கி ன்றன என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கல்லீரல் தானமாகப் பெறப்பட் டாலும், அதைப் பொருத்து வதற்கென 50 முதல் 70 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக் கின்றனர்.
செக்ஸ் உணர்வை அதிகரிக்கவும், செக்ஸில் பலம் கூட்டவும் !
ரத்தம் தானமாகப் பெறப்பட்டது என்றாலும், அதை ஏற்றிய தற்கான தொகை பில்லில் சேர்க்க ப்பட்டிருக்கும். தானம் என்பதற்கான அர்த்தமே இங்கு மாறி விடுகிறது.

தனியார் மருத்துவ மனைகளின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளும் ஆதரவாக இருக்கி றார்கள் என்பது தான் வேதனைக் குரியது.

தானமாகப் பெறப்படும் உறுப்புகளில் தனியார் மருத்துவ மனைக்குப் பகிர்ந்த ளிக்கப் பட்ட உறுப்புகள் எத்தனை? அரசு மருத்துவ மனைக ளுக்குப் பகிர்ந்த ளிக்கப் பட்ட உறுப்புகள் எத்தனை?

தனியார் மருத்துவ மனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவ மனைக ளுக்கு நான்கில் ஒரு பங்கு உறுப்புகள் வழங்கப் பட்டி ருந்தாலே அது அதிகம் தான்.

அதுவும் கண் மற்றும் கிட்னிதான் வழங்கப் பட்டிருக்குமே தவிர கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் வழங்கப் படவே இல்லை.
துணிச்சலாக சில்மிஷம் செய்த பயிற்சியாளரை சிக்க வைத்த சிறுமி !
கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளை மாற்றுவ தற்கான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவ மனைகளில் இல்லை.

மருத்துவத் துறையில் இந்திய அரசு தன்னிறைவு அடைய வில்லை என்பதற் கான சாட்சியம் தான் இது.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
அரசே மருத்துவ வசதிகளுக்கு தனியார் மருத்துவ மனைகளை நம்பியிருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.

அரசு மருத்துவ மனைகளில் மேற்கண்ட உறுப்பு களை மாற்றுவ தற்கான வசதிகள் இல்லை என்பது முற்றிலும் உண்மை யல்ல. தமிழகத்தில் 20 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் இருக் கின்றன.
இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி அப்படி என்ன செய்தார்?
இவற்றில் அதற் கான வசதிகள் இருந்தும், பல மருத்துவ மனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைகளை மேற்கொள் வதில்லை.

உறுப்பு தானம் மத்தியப் பதிவுத் துறையில் பதிவோ ருக்கு வரிசை அடிப்படை யில் உறுப்புகள் வழங்கப் படுவதாகக் கூறுகி றார்கள்.

‘கல்லீரல் தேவை’ என அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளி பதிகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வரிசை அடிப்படையில் அவரது பெயர் முதன் மையாக இருக்கிறது என்றாலும் அரசு மருத்துவ மனையில் கல்லீரலை மாற்றுவதற்கான மருத்துவ வசதியி ல்லை என அவரது கோரிக்கை நிராகரிக் கப்படும்.

தனியார் மருத்துவ மனைக்குச் சென்று லட்சங் களை செலவு செய்யும் அளவு வசதி இல்லாத அவருக்கு மாற்று கல்லீரல் கிடைக்க வாய்ப்பே இல்லை.

அரசு மருத்துவ மனையில் ஒரு ஏழைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் என்ன கிடைத்து விடப்போகிறது?

அதுவே தனியார் மருத்துவ மனையில் பணக்கார நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பல லட்சங்கள் கிடைக்கும்.
போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு.. வித்தை காட்டிய வினோதம் !
தனியார் மருத்துவ மனைகளு க்கே அதிக உறுப்புகள் அளிக்கப்படு வதற்கான காரணம் இது தான்’’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ஆனந்தராஜ்.

வறுமை யின் காரணமாக கிட்னியை விற்பது, பணத்து க்காக வன்மு றையின் மூலம் உடல் உறுப்புகளை திருடுவது

அல்லது பறிப்பது என இதன் கருப்புப் பக்கங்கள் இப்படி யெனில், பணம் படைத்த வர்களுக்கு ஆதரவாகத் தான் மருத்துவத் துறையும் இயங்குகிறது.

அப்படி யெனில் ஏழைகள் வாழத் தகுதியற் றவர்களா என்கிற கேள்வியும் எழுகிறது. பணம், சந்தை என இவை யெல்லாம் மனிதனின் நுகர் வுக்காகக் கட்ட மைக்கப் பட்டது தான்.

இதுவே மனிதத்தை சாகடித்து மனிதனை ஆளத் தொடங் கினால் மனித இனத் துக்கான அழிவு நிச்சயம்.
சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை !
எந்தப் பொரு ளுக்குத் தேவை அதிகம் இருக்கிறதோ, அதற்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும்.

இதயம், கணையம், கல்லீரல் என எந்த உறுப்பாக இருந்தாலும் சிவப்பு சந்தையில் அது நல்ல விலை யுடைய ஒரு பண்டம்தான்!
கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளை மாற்று வதற்கான மருத் துவ வசதிகள் அரசு மருத்துவ மனைகளில் இல்லை. மருத்துவத் துறையில் இந்திய அரசு தன்னிறைவு அடைய வில்லை என்பதற்கான சாட்சியம் தான் இது...
Tags: