வோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்திய தமிழர் !

மெரிக்கா விலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக் கழகத்தில் ஆட்டோ மொபைல் துறையில் பணியா ற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம்.


அடிப்படையில் சென்னை யைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானி யங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்து க்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொ ள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு.

குறிப்பாக, சோதனை ஓட்டத்தி ற்கென்று கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற் காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை.

அப்படித்தான் அண்மையில், ஃவோக்ஸ் வாகன் நிறுவ னத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவி ந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப் போகிறது என்று நினைத்துக் கூட பார் த்திருக்க மாட்டார்.

தற்செய லாக, அந்த வாகனத்தின் புகை வெளியிடும் அளவைச் சோதித்த அரவிந்தும், அவரது நண்பர் மார்க் பெஸ்சும் அதிர்ந்து போனார்கள். 

காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ கட்டுப்பாட்டு விதிகளில் குறிப் பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வா கனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு அதிகமாக இருந்தது.


இதேபோல ஃவோக்ஸ் வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகை வெளியே றியிருக்கிறது.

ஆனால் தர நிர்ணயச் சோதனைகளி லெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள். அது எப்படி? என்ற குழப்பத்தி ற்கான விடையைத் தேடுகையில் தான் அரவிந்த், ஃபோக்ஸ் வாகன் நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக் கண்டறிந் திருக்கிறார்.

காற்றில் நச்சுத் தன்மையை அதிகரிக்கும், மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead) சுற்றுச் சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், 

அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன் வாய்ந்த ஒரு மென் பொருளை இந்த வாகன ங்களில் பொருத்தியி ருக்கிறது இந்த நிறுவனம்.

இதைக் கண்டறிந்த உடன், தன்னம் பிக்கையும் துணிச்சலும் கொண்டவராக, உடனடியாக புகார் பதிவு செய்துள்ளார் அரவிந்த்.

இதைத் தொடர்ந்து, உலக ஊடக வெளியில் பட்டவர்த் தனமாக அம்பலமானது ஃவோக்ஸ் வாகன் ஊழல். இந்த அவமா னத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவ னத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர் கோர்ன், இந்த மோசடிக்குப் பொறுப் பேற்றுப் பதவி விலகினார்.


மேலும் ஃவோக்ஸ் வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃவோக்ஸ் வாகன் நிறுவனம், பங்குச் சந்தையில் தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக் களை இழந்து, அடி மட்டத்தை அடைந் துள்ளது.

ஒரு ராட்சத கார்ப்பரேட் நிறுவ னத்தை, தனி மனிதனாக நின்று ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது போல வீழ்த்திய தமிழரான அரவிந்த் திருவே ங்கடம், உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.
Tags:
Privacy and cookie settings