விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு !

நடிகர் விஜய், புலி படக்குழுவினர், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
 
விஜய் நடித்துள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அவர்கள் புதன்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம், புலி படக்குழுவினரின் வீடுகள், 

அலுவலகங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையால் கோடம்பாக்கம் பரபரத்தது.

விஜய் 

விஜய்யின் வீட்டில் காலை 7 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடந்தது. இந்நிலையில் விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள்
நயன்தாரா 

விஜய்யின் வீட்டில் சோதனை நடந்தபோது நடிகை நயன்தாராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. கேரள மாநிலம் கொச்சி, திருவல்லாவில் உள்ள அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில் அவர்கள் இன்றும் நயன்தாராவின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

சமந்தா 

நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்றும் அவரது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆவணங்கள் 

நேற்றைய சோதனை களின் போது சிக்கிய ஆவண ங்கள் குறித்து சம்பந்தப் பட்ட வர்களிடம் இன்று விசாரணை நடத்தப் பட்டுள்ள தாம். 150 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது
Tags:
Privacy and cookie settings