ஆன் லைனில் பள்ளிப் படிப்பு - NIOS அறிமுகம் !

நீங்கள் பள்ளிப்படிப்பை சரியாகப் படிக்க முடியாமல் விட்டு விட்டோமே எனக் கவலைப் படவேண்டாம். 
பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்புப் படிப்புகளை ஆன்லைன் மூலமாகவும்,

வீட்டில் இருந்த படியே தொலை நிலைக் கல்வியின் மூலமாகவும் படிப்பதற் கான வாய்ப்பினை வழங்குகிறது, 


நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன்ஸ்கூலிங். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அமைப்பு  இது. 

பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டவர்கள் இந்த இன்ஸ்டிட்யூட் மூலம் படித்துத் தேர்வு எழுதி, சான்றிதழ் களைப் பெறலாம்.

கல்லூரிகளில் உயர் படிப்பு களுக்குச் செல்லும் போதும், வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் குறிப்பிட்ட பாடங்களைப் படித்திருக்க வேண்டும் என்று விதி முறைகள் இருக்கலாம்.

அது போன்ற சமயங்களில், அந்தப் பாடங்களை மட்டும் இந்த நிறுவனம் மூலம் படித்து, அவற்றில் தேர்ச்சி பெற முடியும்.

ஏற்கெனவே நீங்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தவராக இருந்தாலும் 

பள்ளி நிலையில் மேலும் நான்கு பாடங்கள் வரை படித்துத் தேர்ச்சி பெற்று, திறனை மேம் படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப் படுகிறது.

குறிப்பிட்ட மையங்களில் தொழிற் பயிற்சிப் படிப்புகளையும் படிக்கலாம். 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

 

மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 


உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்புகளுக்கான புத்தகங்கள் இலவசம்.

பதிவுக் கட்டணம் ரூ. 250. ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வுக் கட்டணம் ரூ.250. சான்றிதழ் களைப் பெற 

கட்டணம் ரூ.100. தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தி லும் இதன் படிப்பு மையம் உள்ளது.

விவரங்களுக்கு: 


புதிய தலைமுறைக் கல்வி
Tags: