குற்றாலம்.. எங்கே கிடைக்கும் இந்த சுகம் !





குற்றாலம்.. எங்கே கிடைக்கும் இந்த சுகம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தென் இந்தியா வின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட த்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
 குற்றாலம் புகைப்படங்கள் - குற்றாலம் அருவி - ஐந்தருவி 


மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்தி லிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம்,

எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சி களை தன்னகத்தே கொண் டுள்ளது.

எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விட த்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலா த்தலமாக விளங்குகிறது.

குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள் 

இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சி களான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி,

தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச் சிகளுக்கு புகழ்பெற்றது. மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன.

அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.

இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி.
பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந் துள்ளன மற்றும் சிறுவர்களு க்கான பூங்காக்களும் நிறைய உள்ளன.

குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன் படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும்.

இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப் படுகிறது. இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது.

சிவன் கைலாச மலையில் நடைபெறும் தனது திருகல்யான த்திற்கு செல்வத ற்காக தெற்கில் முண்டி யடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப் படுகிறது.

குற்றாலத் திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப் பட்டுள்ளன.
குற்றாலம்


பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில் களில் உள்ள கல்வெட்டு களில் பொறிக்கப் பட்டுள்ளன.

குற்றாலத்தை அடைவது எப்படி? 

சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகி ன்றன.

குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப் படுகிறது.

இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங் களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங் களின் வழியாக எளிதில் அணுக முடியும்.

குற்றால த்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும்.

சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப் பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை.

எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றா லத்தை அடைய முடியும்.

குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம் 

குற்றால த்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங் களுக்கு இடைப் பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும்.

கோடை காலம் வெப்பமா கவும் வறண்டும் காணப்ப டுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும். பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும்.
குற்றாலத்தை அடைவது எப்படி?


ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச் சாரலும், இதமான காற்றும் இந்த கால கட்டத்தில் இந்நகரை சுற்றிப் பார்பதற்கு மேலும் வசீகரிப் பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணி க்கையை அதிகரிக் கின்றன.

தென் மேற்கு பருவ மழை ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத் தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப் படுகிறது. குற்றால த்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந் துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப் படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்கு மாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந் துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரரு வியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்ப யணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவி யிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது.

அருவிக்க ரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப் பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன் கூடுகள் அமைந்து ள்ளதால் இந்த இடம் அபாயக ரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப் பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூட மலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்தி லிருந்து உருவாகி சிற்றாற் றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது.


இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தை களுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் தான் குளிக்க அனுமதி உண்டு.

7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்தி லிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந் துள்ளது.
Tags: