சசிபெருமாள் குடும்பத்துக்கு நிதி வழங்கிய விஜயகாந்த் !

மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
 
காந்திய வாதியான சசிபெருமான், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணா மலைக் கடையில் உள்ள மதுக் கடையை அகற்றக்கோரி நேற்று (31ஆம் தேதி) போராட்டம் நடத்திய போது திடீரென மரணம் அடைந்தார்.

இவரது மரணத்திற்கு, அதமிழக அரசுதான் காரணம் எனவும், காவல் துறையின் அஜாக்கிரதையே காரணம் எனவும்,

இனிமேலாவது தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக இயக்கத்தைச் சேர்ந்த வர்களும் வலியுறுத்தி யுள்ளனர்.

இதேபோல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் நேற்று சசிபெரு மாளின் உயிரிப்பு அ.தி.மு.க. அரசே காரணம் என குற்றஞ் சாட்டியி ருந்தார்.

இந்நிலையில், இன்று (1ஆம் தேதி) உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்திற்கு ரூ.1 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.

மேலும், சசிபெருமாளின் உயிரிப்புக்கு தமிழக அரசே காரணம் எனவும், உடனடியாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings