காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கிய பானம் !

பொதுவாக காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைத் தான் குடிப்போம். இதனால் உடலின் ஆற்றல் அதிகரித்து, புத்துணர்ச் சியுடன் இருப்பது போல் உணர்வோம். 



ஆனால் உண்மையில் காபி அல்லது டீயை காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் அல்லது சர்க்கரை உடலின் ஆரோக் கியத்தைப் பாதிக்கும்.

அதிலும் காபி ஒரு அசிடிக் மற்றும் காபியை காலையில் குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கக் கூடும். அது மட்டு மின்றி, இன்றைய அவசர உலகில் ஆரோக்கிய பிரச்சனை கள் அதிகம்

எழுவதற்கு உணவுகளே காரணமாக இருக் கின்றன. எனவே உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதற்கு முதலில் காபி அல்லது டீயை தவிர காலையில் குடிப்பதற்கு ஏற்ற பானம் என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக காபி அல்லது டீயை தவிர்க்க வேண்டும் என்பதில்லை.

அளவாக எப்போ தாவது குடிக்கலாம். சரி, இப்போது காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற வேறு சில ஆரோக்கிய பானங் களைப் பார்ப்போமா!

கண்டிப்பாக டீ குடித்தாக வேண்டு மென்று தோன்றினால், க்ரீன் டீ குடித்து வாருங்கள். இதனால் உடல் புத்துணர்ச் சியுடன் இருப்ப தோடு, உடல் எடையும் குறைத்து, நன்கு பளபளப்பான சருமத் தையும் பெறலாம்.



காலையில் மோர் குடிப்பதும் மிகவும் நல்லது. இதனால் உடல் வெப்பம் குறைவ தோடு, ஆற்றலும் பாதுகாக் கப்படும்.

ஒரு வாழைப் பழத்தை நன்கு மசித்து, அதனை சூடான பாலில் போட்டு, சிறிது தேன் சேர்த்து கலந்து காலையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, உடல் ஆரோக் கியமாக இருக்கும்.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறு வதோடு, உடலும் நீர்ச்சத்துடன் இருக்கும்.

காலையில் இளநீரைக் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனை களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக அல்சரால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இளநீர் மிகவும் நல்ல பானம். 
மேலும் இளநீரைக் குடித்து வந்தால், உடலானது புத்துணர்ச்சி யுடனும், ஆற்றலு டனும் இருக்கும். நல்ல காரமான மசாலா டீயை காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கி யம் பாதுகாக்கப் படுவதோடு,

உடல் புத்துணர்ச் சியுடனும் இருக்கும். அதிலும் இஞ்சி, மிளகு, ஏலக்காய், பட்டை போன்ற வற்றைக் கொண்டு டீ தயாரித்து குடிப்பது மிகவும் நல்லது.
Tags: