அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் தெரிவித்துள்ளார்.
தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச் சேர்ந்த ஆன் மேரி ஓ டூல் எனும் பெண்ணை காதலித்து வந்தார்.
ஒரு பாலின திருமணங்களை சட்ட பூர்வமான தாக்குவதற்கு அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து தனது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி யொன்றின் தில் விக்கிரமசிங்க வெளியிட்டார்.
இத்திருமண யோசனைக்கு ஆன் மேரி சம்மதம் தெரிவித்தார். செயற்கை முறையில் கருத்தரித்ததில் விக்கிரமசிங்கவுக்கு கடந்த மாதம் 17 ஆம் திகதி ஆண் குழந்தையொன்று பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

