நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள் !

மூக்கு குத்துவது, காது குத்துவது, துளையிடுவது கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள் !
ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்து போது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். 

இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். 

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்ற வேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத் தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போ தெலமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல் படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. 

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்து வதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக் கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும்.
இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும் போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். 

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங் களாக இருக்கும்.

ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்ட லத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவப் பெண்களுகே முக்குத்தி அணி விக்கப் படுகிறது.
பருவ வயதை அடைந்த பெண் களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப் பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக் களை வெளிக் கொண்ரு வதற்கு ஏற்படுத் தட்டது தான் இந்த மூக்கு குத்துவது.

மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்த மான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப் படுகின்றன். இடப் பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். 

இடது பக்கம் குத்துவ தால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப் படுத்து கிறது. மனதை அமைதிப் படுத்துகிறது. தியானம், பிராத்தனை யில் ஈடுபட உதவுகிறது.
Tags:
Privacy and cookie settings