யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam

இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி… கல்யாணம் ஆகாதவர் களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள்.
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
கல்யாணம் ஆகாதவர் களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிகோல்கிறது.

கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை ( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது.

பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும். அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்.

காயகல்பம் என்பது எல்லோரும் மருந்தென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அது மருந்து அல்ல, ஒரு உடற்பயிற்சி. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து, தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின் அற்புத பயிற்சி.

இதன் அடிப்படை என்ன ?
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. 

இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது. 

வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும். அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும்.

இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன் படுத்தவேண்டும்.

எப்படி ?

மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும். வாசிக்க வாசிக்க நார்களில் தளர்ச்சி ஏற்படும்.அப்போது என்ன செய்வார்கள், 

அந்த நார்களை இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக வரும். 

மிருதங்கம் போன்று நம் நாடி நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்ற வேண்டும். அது இயற்கையாக இருக்க வேண்டும். 

என்ன செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களையும், சீறும் பாம்பின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்த போது, அவர்களுக்கு ஒரு சூட்சுமம் புலப்பட்டது. 
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை வடிவமைத்தனர். 

இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது. 

நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில் போட்டனர். 

பழங்கால ஓலைச் சுவடிகளை ஆராய்ந்த யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து எளிமை படுத்தினார். 

அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள் இதனை தனியே பழகி, இதில் உள்ள உண்மை நிலை உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கி விட்டது. கண்கள் ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். 

இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும் ஒரு பிரகாசம் வரத் தொடங்கியது. 

அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார். 

எழுபது முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க பறந்திருக்கிறார். 

தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை. மனவளக் கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.

சமாதி அடையும் முன் குறிப்பால் கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். 

அதாவது அவர் வந்த கடமையை அவர் முடிக்கும் வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம் மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.

காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி.
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம். 

அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம். இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது. 

இளமை மீட்கப் படுகிறது என்பதை உணர்ந்தனர். இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர். 

காயக் கல்பத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன . ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்பூக்கப் பயிற்சி, இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. 

இதனை காலையில் மூன்று நிலைகளில், மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம் தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீடிப்பு சாத்தியம்.

சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம். இல்லற வாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு. 

எனினும் குழந்தைப் பிறக்க வேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், 

குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர் சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து,

பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கை யாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காய கல்பத்தில் முடியும். இதனால இல்லற வாழ்வில் எந்தவித குறைபாடும் ஏற்படாது.

இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம். 

சில பெண்களுக்கு காப்பர் – டி உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கருத்தடை மாத்திரை களால் பக்க விளைவுகள் வரும் வாய்ப்புகளும் தவிர்க்கப் படுகின்றது. 

இல்லற வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature edaculation போன்ற பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் (Polysis Ovarian Syndrome) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய் ச்சிகள் மூலம் நிருபணமாகி யுள்ளது. 

கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.

எல்லாரு க்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்று விதமான பதிவுகளால் தீர்மானிக்கப் படுகிறது. 
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர் களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது. 

முதல் இன்று வரை நாம் பழக்க வழக்க த்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும், சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.

விந்தணு நீர்ம நிலையில் இருக்கும் போது, தவறான வினைப் பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப் படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமை யான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும்.

காயக்கல்பம் பயிலும் போது வித்து வலிமை பெற்று அழகான, அறிவான, துறு துறுப்பான குழந்தை பிறக்கின்றன.

அடுத்ததாக இயற்கை யான குழந்தைப் பேறு. எப்படி ஹிப்னோ பர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ 

அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன் தவிர்க்கப் படுகிறது.

சரி கல்யாணம் ஆகாதவர் களுக்கும் என்ன நன்மை.? எங்களுக்கு தானே , நிறையப் பிரச்சனை என்கிறீர்களா ? உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல். 

திருமணத்தை ஆகும் வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப் பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான், 

அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோலுகிறது. 

காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றப டுகிறது. 

இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. 

அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது. உள்ளுணர்வு தவறான நடவடிக் கைக்கு தூண்டுதல் தராது.
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும். 

படிக்கும் பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்ப நிலை குறுகுறுவென ஓடிக் கொண்டிருக்கும். 

முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும். வாரம் ஒரு முறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.

நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும். இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.

ஆமாம் சுய இன்பம் நல்லதா ? கெட்டதா? நவீன மருத் துவர்கள் என்ன சொல் கிறார்கள். அது ஒரு இயல்பான விஷயம்.

அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை. வித்து சக்தி எவ்வளவு தான் வெளியானாலும் மீண்டும் இரத்தம் போல் சுரந்துவிடும்.

எந்தத் தொலைக் காட்சியை திருப்பினாலும் கண்டிப்பான சித்தப்பா மனோபாவத்தில் பளபளப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒப்பனையோடு 

இருட்டு விவகாரங்களைத் திட்டும் இந்த சித்த வைத்தியர்கள் என்ன சொல் கிறார்கள். சுய இன்பம் தவறு !

சரி அறிவியல் மற்றும் உளவியல் என்ன சொல்கிறது.

நான் யோக பயிற்சி தர சென்றாலும் உளவியல் பயிற்சிக்குச் சென்றாலும் அங்கு வரும் பெரும்பாலானவர்களின்

( பெண்களும் தான் என்னிடம் கேட்கும் ) சந்தேகம் சுய இன்பம் பற்றியோ அல்லது பாலுணர்வு குறித்தோ இருக்கும்.

நேரிடையாக கேட்க முடியா விட்டாலும் கேள்வி ஒரு துண்டு சீட்டில் வந்து சேரும். 

அவர்களின் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கு சுய இன்பம் தான் காரணம் என்ற குழப்பத்துடன் பேசுவார்கள்.

சரி சுய இன்பம் சரியா ? தவறா ?
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது வித்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது.

ஆமாம்…! வித்து சக்தி என்றால் என்ன ? அது எப்படி உருவாகிறது ? நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். 

நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. 

இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும் போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.

தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து, எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில்

ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர் கொண்ட ஒரு அனுபவம் தான். 

இதில் யோகிகளும் விதி விலக்கல்ல. இது இயல்பானது. சரி! 

இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம் தான் சுய இன்பம். 

நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். 

இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக் குழம்பை வெளியேற்றும்

அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும். வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவது தான். !

ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது, புகை போன்ற பழக்கம் இருந்தால்,

சாப்பிடும் உணவில் உற்பத்தி யாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது, புகையால் ஏற்படும் பற்றாக் குறையை சமாளிக்கவே சரியாகும். 

மீது உயிர்சக்தி என்ன தான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்து போன தன்மையிலேயே இருக்கும்.

வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மன வலிமை கூடும். 

வித்து குழம்பு தான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ

அந்த அ ளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும். உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.

வித்து சக்திக் குறையும் போது சோம்பல், அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி, உடல் நடுக்கம், நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும்,

ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும். இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும்போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும். 

ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். 

மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும்போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும். ஹி..ஹி…!

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?. அடடா ! உடனே குழம்பி போய் கவலையுடன் நிற்க வேண்டாம்.

இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர், மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. 

அதனால் தான் ஆண்- பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத் தார்கள். 

அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற, இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம்.

பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமை யிழந்தால் பொண்டா ட்டியை கூட ஆள முடியாது ! அது எப்படி? என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது. 

அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது? நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகி விடுகிறதே என்ன செய்வது? 

உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது. கவலை வேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. 

வீரத்துறவி விவேகானந் தருக்கே இது பிரச்ச னையாக இருந்தி ருக்கிறது. 

பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கி விட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப் படுத்த முடியும்.
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
பாலுண ர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக் கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். 

அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமை ப்படும்.

உணவு முறையில் ஒழுக்கம். உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம். 

(Alcohol Increase the Sexual Desire: But not the pleasure). 

முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப் படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும். விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார்.

மீன் உணவிலும் பிரியம் கொண்டி ருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்தி ருக்கலாம்.

உணவிற்கு அடுத்த படியாக தனிமையை தவிருங்கள். பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும். எது என்ன வென்றாலும்,

எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபட வேண்டும்?

ஒரு சங்கல் பத்தை  இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல் இதில் இருந்து விடுபடுவேன், 

என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன் என்று தினந் தோறும் விழிக்கும் போது எடுத்துக் கொள்ளலாம்.

இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளை யாகவே பதிந்து உங்களைக் காக்கும்.

இன்னொன்றும் இருக்கிறது. 
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
அது தான் காயகல்பம் என்றொரு யோகமுறை. காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக் காப்பதில் உறுதுணை புரிகிறது. 

சிவவாக்கியர் என்னும் சித்தர் காய கல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.
“உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே “
காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும் போது மூப்பு வராது, என்றும் இள மையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனா வான் என்பது அதன் சாரம்சம்.

காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிர சாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். 

அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி, வித்து சக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். 
யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம் ! #KayaKalpam
உடலில் வித்து சக்தி மிகும் போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வர முடியும்.

இதன் மூலம் வித்தில் நீர்ப்புத்தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும். காயகல்பம் என்பது மருந்துகடைகளில் கிடைக்கும் மருந்தல்ல அது ஒரு பயிற்சி. 

எனக்குத் தெரிந்து உலகில் ஒரே ஒரு யோக மையத்தில் மட்டுமே அது பயிற்று விக்கப்ப டுகிறது. 

முயற்சி செய்து பாருங்கள். அது தான் வேதாத்ரி மகரிஷி குண்டலிணி யோக ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை.
Tags: