முத்து பெரும் சொத்து | Pearl Great Property !

அழகிய ஆபரணங் களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளை போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். 

இந்தியர்கள் ஆயிரக்கண க்கான ஆண்டு களுக்கு முன்பே முத்து நகை அணிந்து வந்துள்ளனர். 


இதோ முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…

* முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.

* தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். 

அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.

* காற்று புகாத அறைகளில் முத்து ஆபரணங் களை வைக்க வேண்டாம்.

* சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட் களுடன் முத்து மாலைகளை வைக்கக் கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்து க்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.


* காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றை பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.

* அமிலங்கள், ரசாயன பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* நகைகளை கைகளால் எடுப்பதற்கு பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுபதையோ தவிர்க்க வேண்டும்.

* நகை பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்து பயன்படுத்துவதே சரியான முறை.

மருத்துவ குணங்கள்

* முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டு மானாலும் அணியலாம். முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும்.

அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நுல்கள் கூறுகின்றன.

* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்த படுகிறது.

முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள் தயாரிக்க படுகிறது.


* அழகு சாதனங்கள், பற்பசைகள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலைவலி போன்ற நோய்களை கட்டு படுத்துவதில் முத்து முக்கிய இடம் வகிக்கிறது.

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடபொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. 

குவாட்ருலா, நீனியோ, மார்கரிட்டேனோ போன்ற கடல்வாழ் மெல்லுடலி உயிரினங் களே முத்துக்களை உருவாக்கும் சிப்பிகளாகும்.

* பத்து நிறங்களில் முத்துக்கள் கிடைக்கிறது. பொதுவாக இளம்சிவப்பு அல்லது காபி நிறங்களில் முத்துக்கள் கிடைக் கின்றன.

அந்தமான் தீவுகளில் கருப்பு நிற முத்துக்கள் கிடைக் கின்றன.

* ஜப்பானில் செயற்கை முத்துக்கள் விளைவிக்க படுகிறது. மிமிமாட்டோ என்ற ஜப்பானியர் செயற்கை முத்துக்களின் தந்தை எனபடுகிறார்.

இவர் 1893-ம் ஆண்டு முதல் முறையாக செயற்கை முத்தை வளர்த்து சாதனை படைத்தார்.

* இந்தியாவில் மும்பை நகரில் அதிக முத்து நகைகள் விற்பனை யாகிறது.

ராஜஸ்தான் மக்கள் முத்து நகைகளை அதிகமாக பயன் படுத்துகி றார்கள். தமிழகத் தில் முத்துக்கு சிறப்பு பெற்ற நகரம் தூத்துக் குடியாகும்.
Tags:
Privacy and cookie settings