குழந்தைப் பாக்கியமில்லாத தம்பதிகளின் துயர் துடைக்க உதவும் யோகா

அக்காலத்தில் திருமணம் ஆனதும் அடுத்த இரண்டு ஆண்டுகளுள் குழந்தைப் பாக்கியம் கிடைத்து மகிழ்ந்திருந்தது மட்டு மல்லாது நிறையக் குழந்தை களைப் பெற்றெடுத்தனர்.
 


தாயாரின் உடற்கட்டு குலையாது ஆரோக்கி யத்துடன் இருந்தனர். ஆனால் இப்போது தம்பதிகளிடையே குழந்தை பெறும் வளம் அருகிக்கொண்டு வருவதைக் காணமுடிகிறது.

சில தம்பதிகள் திருமணமாகிப் பத்து வருடங்கள் கழிந்தும் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் ஏங்குவதுமல்லாது பல்வேறு உள நலக் கோளாறுகளுக்கும் ஆளாகிறார்கள். கோயில் குளங்களைச் சுற்றி வருகின்றனர்.

உளநலக் கோளாறுகள் குழந்தை கிடைக்கும் வாய்ப்பை மேலும் குறைக்கிறது.
பெண்ணுக்கு ‘மலடி’ என்ற பட்டம் சூட்டப்படுவதோடு பிறரின் நகைப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.

சில ஆண்கள் வாரிசு வேண்டும் என்ற பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகக் கைப்பிடித்தவனை விட்டு விட்டு மறுமணம் செய்து கொள்வதையும் காண முடிகிறது. சிலர் விவாகரத்து வழக்குகளையும் தாக்கல் செய்து நீதிமன்றம் ஏறி இறங்குகின்றனர்.

உண்மையில் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமைக்கு ஆண்களே காரணமாகும். சுமார் அறுபது சதவீதமான ஆண்கள் குழந்தை பெறும் வளம் அற்றவர்களாகக் காணப்படுகின்றனர் என மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சூழல் மாசுபடல் ஆரோக்கியமற்ற உணவு, உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, மன உளைச்சல், புகைத்தல், அளவுக்கு அதிகமான பாவனை இறுக்கமான உள்ளாடை

மற்றும் மருந்து, மாத்திரை பாவனை, ஆண்மைக் குறைபாடு, தொற்று நோய்கள், நீரிழிவு போன்ற காரணிகள் ஆண்கள் கு¡ந்தை பெறும் ஆற்றலைப் பாதிக்கின்றன.

பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமை, மாதத்தீட்டுப் பிரச்சினைகள் நீர்க் கட்டிகள் சூலகத்தைச் சுற்றி இருப்பதால் கருமுட்டை வெளிவருவ தில் தடங்கள் ஏற்படுதல், பிளாஸ்டிக் பாவனை மற்றும் சோயா உணவு களை உட்கொள்ளல் போன்றவை பால் சுரப்பி யின் உற்பத்தியைக் குறைக்கும்.

ஆண்கள் கொனோரியா போன்ற பால் வினை நோய்கள், சிறு நீர் தொற்று, கூவக்கட்டு போன்ற தொற்று நோய்களின் தாக்கம் காரணமாகவும் குழந்தை பெறும் ஆற்றலை இழக்கின்றனர்.

தொழில் புரியும் இடம் மற்றும் வீட்டில் ஏற்படும் மன உளைச்சல், உணர்ச்சி வசப்படுதல், வீக்கம், போன்றவைக்கு உட்கொள்ளும் மருந்துகள் ஆகியவை காலப்போக்கில் ஆண்களின் குழந்தை பெறும் வளத்தைப் பாதிக்கின்றன.

சில வீரியமிக்க மருந்துகள் ஆண்களில் விதைகளைச் சுருங்கப் பண்ணுவதால் அவற்றில் உயிர் அணுக்கள் உற்பத்தியாவது தடைப்பட்டு மலடு ஏற்படுகிறது.

கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைவஸ்துப் பாவனை ஆண்களின் பால் சுரப்பியால் சுரக்கப்படும் பால் சுரப்பைப் பாதிப்பதால் உடலுறவு வேட்கை அகன்று விடுகிறது.

புகைபிடிப்போருக்கு இருபது சதவீதமான உயிர் அணுக்களே உற்பத்தியா வதோடு தரம் அற்ற உயிர் அணுக்களே அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

புகையில் உள்ள சில இரசாயனப் பொருட்கள் உயிர் அணுக்களை அழித்துவிடும் திறன் கொண்டவையாகும். நீரிழிவு நோய் ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்து வதனால் குழந்தை பெறும் சாத்தியம் குறைந்து விடுகிறது.

 


இறுக்கமான நைலோன் துணியினால் உள்ளாடை அணிதல் மற்றும் தடித்த சீலையால் தயாரித்த கால் சட்டையை இறுக்கமாக அணிதல் போன்ற வற்றால்

ஆண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் வெப்பம் உயிர் அணுக்களின் உற்பத்தியைப் பாதிக்கிறது. உஷ்ணம் அதிகமான சூழலில் தொழில் புரிதலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நச்சுத்தன்மையுள்ள பொருட்கள், இரசாயனப் பொருட்கள், பூச்சிகொல்லி மருந்துகள், உலோகத் தொழில், கதிரியக்கம் போன்றவை காரணமாகவும் உயிர் அணுக்களின் தரமும், அளவும் குறைகிறது.

குறிப்பிட்ட அளவில் உயிர் அணுக்களின் தரம் இருந்தால் தான் கருத்தரித்தல் இடம்பெறும். அதிக உடற்பருமன் உள்ளவர்களின் பால் சுரப்பியின் அளவு குறைதல் காரணமாகக் குழந்தை வளம் குறைகிறது.

பணம் படைத்தோர் இலட்சக் கணக்கில் பணம் செலுத்தி சோதனைக் குழாய் கருத்தரிப்பை மேற்கொள்கின்றனர். இவர்களில் பத்துப் பேரில் இரண்டு பேரே வெற்றியடைகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் யோகா சித்தர்கள் ஆண் மலடு மற்றும் பெண் மலடுக்குச் சிகிச்சை அளித்து மிகவும் துல்லியமாகக் குணப்படுத்தியுள்ளனர். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது அவர்களின் கோட் பாடாகும்.
 
பால் சுரப்பு உற்பத்தி யில் ஏற்படும் கோளாறு காரண மாகவே ஆண் களின் உயிர் அணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுகிறது. சில உணவுகள் இக்கோளாறை நீக்கும் வலிமை கொண்டுள்ளன.

அதிக அளவு மரக்கறி வகைகள், பழ வகைகள், பால், பால் உணவுகள், முட்டை, மீன் எண்ணை, ஒலிவ் எண்ணை, பாதாம் பருப்பு, வால்நட், எள்ளு பாசிப்பயறு, சிறிய மீன், இறால், பருப்பு, உளுந்து போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தக்காளி, காலிபளோவர், கோவா முழுத் தானியம், தவிட்டரிசி, உருளைக் கிழங்கு, தேசிக்காய், உள்ளி போன்றவை அடங்கிய உணவை அதிகம் உட்கொள்ளல் வேண்டும். மாம்பழம், பப்பாசிப்பழம், வாழைப்பழம் போன்ற பழ வகைகளை அதிகம் உட்கொள்ளல் வேண்டும்.

பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து உட்கொள்ளல், 1/4 கோப்பை பாதாம் பருப்பு, வால் நட், பச்சை சுரக்காய் விதைகளைச் சாப்பிடல் நல்ல பலனை கொடுக்கும். 

பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு. திராட்சை மூன்றையும் ஒன்றாக உட்கொள்ளல் விரைவில் உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இதே போன்று பச்சை கரட், பாதாம் பருப்பு, வில்வம் பழம் மூன்றையும் ஒன்றாகச் சாப்பிடலாம். மாம்பழம், வாழைப்பழம், உள்ளி போன்றவையும் உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் கொண்டவையாகும்.

அதிக புரதச் சத்து அடங்கிய, மற்றும் கொழுப்பு குறைவான முழுத்தானிய வகைகளும் உதவும். வல்லாரை, வசம்பு போன்றறையும் மிகவும் சக்தி வாயந்த சிறந்த மூலிகைகளாகும்.

மேற்படி மூலிகைகள் உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஆண்மைக் குறைபாட்டையும் அகற்றும் அபார திறன் கொண்டவை யாகும்.

பாதாம் பருப்பு – 10 கிராம், மிளகு 10 கிராம், பூசணி 50 கிராம் ஆகியவற்றைத் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தொடர்ந்து சில நாட்கள் அதிகாலையில் சாப்பிட விந்து உற்பத்தி அதிகரிக்கும்.


காய்ந்த கொத்தமல்லி 50 கிராம், வறுத்த மொச்சைக் கொட்டை 25 கிராம், வறுத்த உளுந்து 25 கிராம், மிளகு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தினமும் 03 கிராம் சாப்பிட விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

மேல் குறிப்பிட்ட ஆரோக்கியமான உணவு களையும், மூலிகை களையும் உட்கொண்டு, பருத்தி யாலான மெல்லிய உள்ளாடை அணிந்து கிரமமான யோகாவில் ஈடுபட ஆண்களின் விந்தில் 

உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைதல் தடுக்கப் படுவதோடு, குறைந்தாலும் விரைவில் அதிகரித்துக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

யோகாவின் குழந்தைப் பாக்கியம் கிடைக்க உதவும் அபார திறன் பற்றி அதிகமான பெண்கள் அறியாது இருக்கிறார்கள். யோகா அவர்களின் மன உளைச்சலை அகற்றி, மனதில் தெளிவையும், அமைதியையும் ஏற்படுத்தி அவர்களின் குறைபாட்டை நீக்கும்.

அவர்களின் மாதத் தீட்டுப் பிரச்சினைகள் அகலும், ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். இவை அனைத்தும் யோகா பயிற்சியில் ஈடுபட்ட சில மாதங்களுள் தென்படுவதை அவர்கள் உணர்வர்.

உயிர் அணுக்களின் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகளின் மன உளைச்சல் மிகவும் முக்கியமானது. ஆங்கில மருத்துவர்களால் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது.

யோகாவில் ஈடுபடும் போது ஆங்கில மருத்துவர்கள் மன அமைதிக்கு பரிந்துரை செய்யும் மாத்திரைகள் போன்று செயல்பட்டு மனதில் அமைதியையும் சந்தோசத்தையும்

தெளிவையும் ஏற்படுத்தும் திறன் கொண்ட எண்டோர்பின் என்ற பொருள் மூளையில் அதிக அளவு சுரக்கப்படும். இதனால் மன உளைச்சல் அகன்று விடும்.

ஆண்மைக் குறைபாடு ஏற்பட நீரிழிவும் ஒரு முக்கிய காரணியாகும். யோகாவின் போது கணையச் சுரப்பி இதமாகத் தடவிவிடப் படுவதாலும் அதிக அளவு இரத்தத்தைப் பெறுவதாலும் அது அதிக அளவு இன்சுலின் சுரக்கத் தூண்டப்படும்.
மேலும் பெண்களின் கர்ப்ப கால சிக்கல்கள் ஏற்படாது தடுப்பதால் கருச்சிதைவு குறை மாதப் பிரசவம், சிசேரியன் மூலம் பிரசவம் போன்றவைக்கு இடமிருக்காது. தாய்ப்பால் நன்கு சுரப்பதால் புட்டிப்பால் வாங்க வேண்டிய அவசி யம் ஏற்டாது.


குழந்தை அழகான தாகவும் ஆரோக்கிய மாகவும், ஞானம் கொண்ட தாகவம் இருக்கும். பிரசவத்தின் பின் பெண்களுக்குத் தொப்பை போடல் தடுக்கப் பட்டு உடற் கட்டு கலையாது என்றும் இளமையுடன் இலட்சுமிகரத் தோற்றத்துடன் இருக்க உதவும்.

மேலும் இயற்கை முறையில் கருத்தடையை மேற்கொள்ளவும், விரும்பிய நேரம் விரும்பிய குழந்தையைப் பெற்றெடுக்கவும் முடியும்.

குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதிகள் இருவரும் மேல் குறிப்பிட்ட ஆரோக்கிய மான உணவுகளை உட்கொண்டு நம்பிக்கையுடன் யோகாவை சிரமமாக ஈடுபட அவர்களின் குறை அகலும்.

மேல் விபரித்த யோகா சிகிச்சை மூலம் கருத்தரிக்க முயற்சிப் போர் அனுபவமிக்க யோகா சிகிச்சை நிபுணரின் கண்காணிப் பில் ஈடுபடல் விரும்பத்தக்கது.
Tags:
Privacy and cookie settings