மிகவும் உயரமான சாதனை உயர்ந்த குடும்பம்!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றனர் இந்தியாவின் உயரமான குடும்பத்தினர். புனேயைச் சேர்ந்த, நாட்டின்மிக உயரமான குடும்பத்தினர்,உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலம் புனேநகரைச் சேர்ந்தவர் சரத் குல்கர்னி, 52. இவரது உயரம், 7 அடி1.5 அங்குலம். மனைவி சஞ்சோத், 46, உயரம், 6 அடி 2.6 அங்குலம். மகள் ம்ருகா, 22, உயரம்,6 அடி ஒரு அங்குலம்.

மற்றொருமகள் சன்யா, 16, 6 அடி 4 அங்குலம். ஒட்டுமொத்த குடும்பத்தின் மொத்த உயரம் 26 அடி.குல்கர்னி - சஞ்சோத்துக்கு,1988ல், திருமணம் நடந்தது.

1989ல், நாட்டின் உயரமான தம்பதியராக, "லிம்கா சாதனை'ப்புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகளும் உயரமாக இருப்பதால், நாட்டிலேயே உயரமான குடும்பத்தினர் என்ற பெருமை பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின், கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரைச்சேர்ந்த வெயின்-லவுரி ஹால்கிவிஸ்ட் தம்பதியினரின் மொத்தஉயரம், 13 அடி, நான்கு அங்குலம். இந்த தம்பதியர் தான் உலகின் மிக உயரமான தம்பதியர்என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

விரைவில், உலகின் உயரமான குடும்பத்தினர் என்ற சாதனையை குல்கர்னி குடும்பம்தட்டிச் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கின்னஸ் சாதனைபுத்தகத்தில் உயரமான குடும்பத்தினர் தொடர்பான பிரிவு தற்போது இல்லை என்பதால்,மீண்டும் அதைச் சேர்ப்பதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

""டீன் ஏஜ் பருவத்தில் என்உயரம், 7 அடியாக இருந்தது. இந்த உயரத்தால் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளேன்.

உயரத்தின் மூலம் விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனகருதி, என் சக்தியை செலவழித்தேன். குறிப்பாக, கூடைப்பந்துபோட்டியில் சாதிக்க விரும்பினேன். ஆனால், நான் வசித்தது குக்கிராமம் என்பதால், என்முயற்சி பலனளிக்கவில்லை.

வித்தியாசமான வாழ்வுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி,'' என, சரத் குல்கர்னி தெரிவித்தார். அவரது மனைவி சஞ்சோத்,""இந்தியாவில் ஆணை விடபெண் உயரமாக இருப்பது பெண்ணுக்கு சங்கடமாக இருக்கும்.

என் உயரத்தைப் பார்த்து,மன வருத்தம் அடையக் கூடிய,என்னை விட குள்ளமானவரைநான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒருநாள் என் கணவர் மும்பை வீதியில் நடந்து சென்றார்.

என்பாட்டி அவரை அணுகி, என்னை திருமணம் செய்துகொள்வது குறித்து பேசினார்.சில நாட்களில் என் கணவர் அவரது குடும்பத்தினருடன் வந்து,என்னை பேசி மணமுடித்தார்,''என்றார்.

நாட்டின் உயரமான குடும்பதலைவர் என்ற பெருமைக்குசொந்தக்காரரான சரத் குல்கர்னி, அவருக்கு பொருத்தமான உடைகள், காலணிகள் கிடைக்காமல்அவதிபட்டு வருகிறார். அவருக்கு உரிய காலணிகளை,"ஆன்-லைன்' மூலம் பதிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கிறார்.

அவரது வீட்டின் சமயலறையில் இருந்து அனைத்து அறைகளும், நீள அகலத்துடன் உள்ளன. இவர்கள்பஸ்களில் பயணிப்பதில்லை.இரு சக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.
Tags: