விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை!

வலங்கைமானை அடுத்த கீழநல்லம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்த ராஜன்.
இவருடைய மகன் குருமூர்த்தி (வயது27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த குருமூர்த்தி சம்பவத்தன்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்சு வேன் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று குருமூர்த்தி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings