டிரைவர் துணையில்லாமல் 20 கிமீ தூரம் சாதாரண போக்குவரத்து சூழலில் பயணித்து அசத்தியிருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்திருக்கும் புதிய தானியங்கி பஸ்.
உலகிலேயே சாதாரண போக்கு வரத்து சூழலில் இயக்கப் பட்ட முதல் தானியங்கி பஸ்ஸை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சோதனை ஒட்டத் தில் ஈடுபடுத்தி வெற்றி கண்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர் டாம் நகரிலுள்ள ஹார்லேம் என்ற இடத்தி லிருந்து சிச்சிபோல் விமான நிலையத் துக்கு இடை யிலான 20 கிமீ தூரத்திற்கு இந்த பஸ் இயக்கப் பட்டு சோதிக்கப் பட்டது.
கடந்த இரு ஆண்டுகளு க்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டிரக்குகளுக்கான தானியங்கி தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் பஸ்சுக்கான சிறப்பம் சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஃப்யூச்சர் பஸ் என்ற தானியங்கி பஸ்ஸை உருவாக்கியது.
இந்த பஸ்சில் விசேஷ மான சிட்டிபைலட் என்ற தானியங்கி தொழில் நுட்பம் கொண்டது. இதில், விசேஷம் என்ன வெனில் பாதசாரிகள் குறுக்கிடும் போது தானாகவே பிரேக் பிடித்து நின்றதுடன், சிக்னல் களையும் சரியான கண்டு கொண்டு சிறப்பாக இயங்கி யிருக்கிறது.
இந்த பஸ் ஓடும் போது மட்டு மில்லாமல், பேருந்து நிறுத்தங் களையும் சரியாக அடையாளம் கண்டு நின்றதுடன், கதவுகளும் தானாகவே திறந்து மூடின. சுரங்கப் பாதையி லும் இந்த பஸ் சிறப்பாக இயங்கியது.
இந்த பஸ்சில் ஒரு டஜனுக்கும் அதிகமான கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப் பட்டிருக் கின்றன. ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் சாலையை சரியாக உணர்ந்து கொண்டு இந்த பஸ் பயணித் துள்ளது.


