பெரும்புள்ளிகள் விஷயத்தில் தாம் தலையிடுவதில்லை... நடிகர் பாலா !

0

நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு யாரிடமும் காசு வாங்காமல், தான் சம்பாதித்த சொந்த காசில் இருந்தே வழங்குவதாக சின்னத்திரை நடிகர் பாலா தெரிவித்தார்.

பெரும்புள்ளிகள் விஷயத்தில் தாம் தலையிடுவதில்லை... நடிகர் பாலா !
பிரபல சின்னத்திரை நடிகர் பாலா, தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4-வது ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார்.

இதன் மூலம் கடந்த 125 நாட்களில் நான்கு ஆம்புலன்ஸ்களை நடிகர் பாலா வழங்கி இருக்கிறார். இவ்வாறு, நலத்திட்ட உதவிகள் செய்வதால், தமக்கும் அரசியலுக்கு தொடர்பில்லை எனவும் பாலா சிரித்த முகத்துடன் விளக்கமளித்தார். 

உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !

தன்னிடம் சொந்த கார் இல்லை என்றாலும், ஏழை அடித்தட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் வழங்குவது திருப்தி யளிப்பதாகவும் கூறினார். 

எவ்வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல், தனது சொந்த காசிலேயே ஆம்புலன்ஸ்களை வழங்கி வருவதாகவும் கூறினார்.

ஒரு படத்திற்கு 100 கோடிகளுக்கும் மேல் ஊதியம் வாங்கும் நடிகர்கள் கூட இலவச ஆம்புலன்ஸ்கள் வழங்குவதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெரும்புள்ளிகள் விஷயத்தில் தாம் தலையிடுவதில்லை என்று கூறினார். 

10 ஆம்புலன்ஸ் வழங்குவதே தனது இலக்கு என்றும் பாலா கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings