சாக்கு பையில் நாணயங்கள் கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் !

0

பொதுவாகவே ஐபோன் என்பது வசதி படைத்த மக்களுக்கான போன் என்ற பார்வை உள்ளது. அதற்குக் காரணம் ஐபோனின் விலை உச்சத்தில் இருப்பதே ஆகும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. 

சாக்கு பையில் நாணயங்கள் கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் !
யார் வேண்டுமானாலும் ஐபோன் வாங்க முடியும். அதற்கு ஏற்றாற் போல, குறைந்த விலையிலேயே ஐபோன்கள் கிடைக்கின்றன. அவரர் வசதிக்கு ஏற்ப ஐபோன்களை அதற்கு ஏற்ற மாடல் மற்றும் விலையில் பார்த்து வாங்கிக் கொள்ளலாம். 

எல்லாம் சரி.. ஆனால் ஐபோன்களை பிச்சைக்காரர்கள் கூட வாங்க முடியும் என்று யோசித்துப் பார்த்துள்ளீர்களா? அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பிச்சைக்காரர் ஒருவர் ஒரு சாக்குப்பை நிறைய நாணயங்களைக் கொடுத்து ஐபோன் வாங்குவது போல உள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஒரு பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ ஆகும். 

ஒரு நபர் பிச்சைக்காரர் போல உடையணிந்து கொண்டு சாக்குப்பை நிறைய சில்லறைகளைக் கொண்டு கடைகளில் ஐபோன் வாங்க முயற்சிப்பது போன்று வீடியோ தயாரிக்கப் பட்டுள்ளது. 

இதை எக்ஸ்பெரிமெண்ட் கிங் என்ற இன்ஸ்டாகிராம் சேனல் வெளியிட்டுள்ளது. உண்மையில் பிச்சைக்காரர் போல வேஷமிட்டுள்ள அந்த நபரை நிறைய கடைகளில் உள்ளே அனுமதிக்கக்கூட இல்லை. 

அவரது தோற்றத்தை காரணம் காட்டி உள்ளே அனுமதிக்க வில்லை. எனினும் ஒரு கடையில் அவரை அனுமதித்தனர். 

அவர் தன்னிடம் உள்ள சாக்குப் பையில் உள்ள நாணயங்களைக் கொட்டி அதை கடைக்காரர் எண்ணிய பிறகு ஐபோன் 15 மாடல் போனை வாங்குவது போல அந்த வீடியோவில் உள்ளது. 

இந்த அறிகுறிகள் இருந்தால் நிமோனியா உங்களை தாக்கும் தெரியுமா?

அந்த வீடியோவை நிறையப் பேர் பகிர்ந்தும் லைக் செய்தும் வருகின்றனர். ஒரு சிலர் அந்த வீடியோவை சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று கூறியுள்ளனர். 

ஒரு சிலர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லை என்பதைக் காட்டுவதைப் போல இந்த வீடியோ உருவாக்கப் பட்டுள்ளது. 

உண்மையிலேயே பிச்சைக் காரர்களால் ஐபோன் 15 மாடல் வாங்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings