காதணி விழாவிற்கு வந்த ரஜினி... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !

0

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது.

காதணி விழாவிற்கு வந்த ரஜினி... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !
விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தடைந்தார். அவருக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

பின்னர் ரசிகர்களுக்கு கையசைத்தவாறு காரில் புறப்பட்டார். முன்னதாக விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவில் பூக்களால் அலங்கரிக்கப் பட்டது. 

செளந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings