தன் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தவர்... எதிர்நீச்சல் குடும்பம் !

0

நடிகர் மாரிமுத்து சின்னத்திரை சீரியலில் நடித்து பேமஸ் ஆனாலும் அவர், சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

தன் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தவர்... எதிர்நீச்சல் குடும்பம் !

அஜித்தின் வாலி படத்தில் தொடங்கி, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் வரை எக்கச் சக்கமான படங்களில் நடிகர் மாரிமுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

இவர் நடித்து முடித்துள்ள படங்களும் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக சூர்யா - சிறுத்தை கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அதே போல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரி முத்து சின்ன ரோலில் நடித்திருக்கிறார். 

தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !

இது தவிர சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாரிமுத்து நடித்த ஒரு படம் தான் விழா நாயகன். இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் மாரிமுத்து கடைசியாக கலந்து கொண்டாராம். 

அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் படு வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தபடி நிற்கிறார் மாரிமுத்து.

ஷூட்டிங் ஸ்பாட்டில் எதர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. 

தன் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தவர்... எதிர்நீச்சல் குடும்பம் !

இறக்கும் முன்னரே தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் மாரிமுத்து நின்று செல்பி எடுத்ததை பார்த்த ரசிகர்கள் படத்துக்காக வைத்தது இப்படி நிஜத்தில் நடந்து விட்டதே என புலம்பி வருகின்றனர். 

இது குறித்து அதிகமான ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அது போல இந்த சீரியலில் பர்ஹானா கேரக்டரில் குணசேகரனை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடித்து வரும் நடிகை ஜிபா,, இந்த மோசமான செய்தியால் தான் நான் எழுந்தேன். 

எதிர்நீச்சல் சீரியலில் உங்களுடன் பணி புரிந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது. 

எங்கள் தொழில்துறையில் எங்களுடைய அனைவருடைய இதயங்களிலும் நீங்கள் ஒரு முக்கியமான அடையாளத்தை அமைத்து இருக்கிறீர்கள். 

தன் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தவர்... எதிர்நீச்சல் குடும்பம் !
மாரிமுத்து சார் நீங்க இல்லாம் எதுவுமே நடக்காது. இவ்வளவு சீக்கிரமாக சென்று விட்டார். ஆர் ஐ பி என்றாலும் முடிந்தால் திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் ஜனனியாக நடித்து வரும் நடிகை மதுமிதா, நீங்கள் சிறந்தவர், பிரகாசம், உழைப்பு, சிரிப்பு மற்றும் அன்பு எல்லாவற்றாலும் நிரப்பப்பட்ட ஒரு பாரம்பரியத்தை நீங்கள் விட்டு சென்றிருக்கிறீர்கள். 

மணிக்கட்டு இப்படி இருந்தால் உடனே டாக்டர பாருங்க !

அதை யாராலும் மாற்ற முடியாது. உங்களுடைய விருப்பம் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்... என்று பதிவு மாரிமுத்துவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings