கழிவறையில் ரகசிய கேமரா.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி !

0

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகே மசினகுடியில் தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

கழிவறையில் ரகசிய கேமரா.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி !
இங்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆச்சக்கரை பகுதியில் உள்ள விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சார்ந்த சாஹத் (22) தனது மனைவியுடன் தங்கிய போது கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

வார நாட்களில் நடைப்பயிற்சி... வாழ்நாள் ஆரோக்கியம் !

இது தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக விடுதி ஊழியர் சிண்டு (22) என்பவர் கைது செய்யப்பட்டார். 

பின்னர், கூடலூர் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். 

மசினகுடி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்லும் நிலையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings