ரூபாய் நோட்டுகள் கிழிந்து இருந்தால் எங்கு மாற்றுவது? முழு விபரம் !

0

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில், வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும், பண நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடைய வில்லை. 

ரூபாய் நோட்டுகள் கிழிந்து இருந்தால் எங்கு மாற்றுவது? முழு விபரம் !
அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்து இருந்தால் அதைப் பெற்றுக் கொள்ளப் பலரும் மறுப்பர். 

ஒரு வேளை உங்களிடம் அப்படி ஒரு பணம் இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பாலியல் கொடுமையால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் !

பணம் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு?

ரிசர்வ் வங்கி தான் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதே போல ஒரு பணத்தை வடிவமைப்பதில், அரசின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்படும். 

வரிசை எண்களின் (serial number) அடிப்படையில் ஆர்.பி.ஐ எவ்வளவு பணம் வேண்டும் என்பதை அச்சகங்களிடம் கோரும். அவற்றை 5 லாக்கர்களில் ஆர்.பி.ஐ பாதுகாத்து வைத்திருக்கும். 

பரிசோதித்த பின், வங்கிகள் மூலம் ஆர்.பி.ஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும். அதே போல, வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பரிசோதிக்கப்பட்டு அது நல்ல நிலையிலிருந்தால் மீண்டும் வங்கிகள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். 

பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தால், அவற்றைத் தூள் தூளாக்கப்பட்டு அழிக்கப்படும்.

ரூபாய் உருவாக்குவதில் இந்திய அரசின் பங்கு?

நாணயச் சட்டம் 1906-ன் படி, காலத்திற்குக் காலம் திருத்தங்கள் அடிப்படையில் நாணயங்கள் உருவாக்கும் பொறுப்பு இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணயத்தின் வடிவமைப்பினையும், அதன் இலக்கு மதிப்பினையும் இந்திய அரசு தீர்மானிக்கிறது.

காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது?

ஆர்.பி.ஐ பணத்தை எப்படி சேமித்து வைக்கிறது?

பணத்தாள்களை நாணயங்களையும், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பணத்தை பாதுகாக்கும் லாக்கர்கள் வைத்திருக்கும் அதிகாரம் அளித்துள்ளது. 

இந்தியாவில் மொத்தம் 4368 லாக்கர்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல சிறு மதிப்பு நாணயங்கள் பாதுகாக்க நாடுமுழுக்க 3708 மையங்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ 2002-ம் ஆம் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த பணித்தாளாக ஆர்.பி.ஐ எதைக் கணக்கிடுகிறது?

ரூபாய் நோட்டுகள் கிழிந்து இருந்தால் எங்கு மாற்றுவது? முழு விபரம் !
மடங்கியும், வரிசை எண்கள் மங்கியும், எரிந்தும் காணப்படுவது சேதமடைந்த பணத்தாளாக கருதப்படுகிறது. பணத்தாள் இரண்டு துண்டுகளாகி, வரிசை எண் இரண்டிலும் சரியாக இருந்தால் அதை சேதமடைந்த பணமாக ஆர்.பி.ஐ எடுத்துக் கொள்ளும்.

சேதமடைந்த பணத்திற்கு முழு மதிப்புப் பெற அதிகாரம் உள்ளதா?

அரசியல் கோஷங்கள், கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், 2009 விதி எண் 6(3)-ன்படி சட்டப்படி பணமென கருதப்பட மாட்டாது. 

அதற்கான உரிமை தொகையும் வழங்கப்படாது. நோட்டு திருப்பித் தருதல் விதிகளின் விதி எண் 6(3) படி திருப்பி அளிக்கவே ஆர்.பி.ஐ பரிந்துரைத்துள்ளது.

ஒரு ரூபாய் நோட் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக மட்டுமே கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகள் எந்த வங்கியிலும் வழங்கப்பட்டு மாற்றலாம். 

ரிசர்வ் வங்கி விதி 2009 படி, அந்த பணத்திற்காக மதிப்பினை பெற்றுக் கொள்ளலாம். எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக் கொண்ட பணத்தை எந்த வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளப்படாது. 

பணம் வைத்திருப்பவர், அதை ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்குப் பரிசீலிக்கப் பட்டுத் தீர்வு காணப்படும்.

அழுக்கடைந்த பணத்தை ஒரு தனிப்பட்ட நபர், ஒரு நாளில் 20 நோட்டுகளை ரூ.5000 வரை மதிப்பு கொண்டதாக இருந்தால் எளிதில் மாற்றிக் கொள்ளலாம். 

20 நோட்டுகளுக்கு அதிகமாகவோ, ரூ. 5000-க்கும் அதிகமாகவோ வங்கிகள் மாற்ற முன் வந்தால், அதற்கு ஜூலை 01, 2015 தேதியிட்ட DBR. No. Leg. BC.21/09.07.006/2015-16 சுற்றறிக்கையின் படி ரசீது வழங்கி வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம். அத்துடன் சேவை கணக்கும் வசூலித்துக் கொள்ளலாம்.

ஒரு தனிநபர் லாக்கர் இல்லாத வங்கி கிளையில் 5 நோட்டுகள் மாற்றுவதற்காக அளித்தால், பகுதி-III, NRR 2009 விதியின் அடிப்படையில் அது மாற்று மதிப்பிலேயே பணம் வழங்கலாம். 

நோட்டுகளை ரசீதை அளித்துப் பெற்றுக் கொள்ளலாம். அவை தொடர்புடைய லாக்கர் உடைய வங்கிகளுக்கு மதிப்பீடு செய்ய அனுப்பப்படும். அதைச் சரிபார்த்த பின், நோட்டுகளின் மாற்று மதிப்பில், பண மதிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒரு தனிநபர் 5-க்கும் அதிகமான பண நோட்டுகளை, ரூ. 5,000-க்கும் மிகாமலிருந்தால், அவற்றைக் காப்பீட்டு அஞ்சல், வங்கிக் கணக்கு தேவையான கணக்கு எண், கிளையின் பெயர் மற்றும் IFSC விவரங்களுடன் அருகிலுள்ள கருவூல வங்கிக் கிளைக்கு அனுப்பி, மாற்றிக் கொள்ளலாம். 

ரூபாய் நோட்டுகள் கிழிந்து இருந்தால் எங்கு மாற்றுவது? முழு விபரம் !

கருவூல வங்கிக் கிளைகள் காப்பீட்டு அஞ்சல் மூலம் பெற்ற சிதைந்த நோட்டுகளுக்குரிய மதிப்பீட்டுத் தொகையை, அவற்றைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும்.

வங்கிகளில் பெறப்படும் சேதமடைந்த பண நோட்டுகளைச் சரிபார்க்க நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் படி, வங்கியில் பொறுப்பு அதிகாரி, வங்கிக்கிளை மேலாளர், கணக்கர் அல்லது பணித்துறையிலுள்ள அதிகாரி ஒருவரை நியமிக்கப்படும். 

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வியர்வை !

அந்த நோட்டுகள் குறித்த தீர்ப்பினை முடிவு செய்த பின், நியமிக்கப்பட்ட அதிகாரி பெறப்பட்ட தாள் எந்த நிலையில், இருக்கிறது என்ற அடிப்படையில், Pay/Paid/Reject முத்திரையிட்டு தனது கையொப்பத்தை பதிவிட்டு ஆர்.பி.ஐ-க்கு அனுப்புவார்.

பணத்தாள் பேப்பரில் தான் தயாரிக்கப்படுகிறதா?

இந்தியாவில் பேப்பர் போன்ற பணம், 100 சதவீதம் பருத்தி யிலிருந்து எடுக்கப்படும் பிசினில் தயாரிக்கப் படுவதாக ஆர்.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)