உங்க தெருவுல பீஸ் போயிருச்சா? இதை பண்ணுங்க, லைன் மேன் வீட்டு வாசலில் !

0

நம்ம ஊரில் திடீரென மழை பெய்தாலோ காற்றடித்தாலோ கனரக வாகனங்கள் தெருவில் உள்ள கரண்ட் கம்பத்தில் மோதி விட்டாலோ நம் வீட்டில் திடீரென கரண்ட் கட் ஆகிவிடும். 

உங்க தெருவுல பீஸ் போயிருச்சா? இதை பண்ணுங்க, லைன் மேன் வீட்டு வாசலில் !
பீஸ் போயிடுச்சுன்னா அந்த பிரச்சனையை உடனே சரி பண்ண முடியாது. EB அலுவலகத்துக்கு சென்று எங்க வீட்டுல கரண்ட் பீஸ் போயிடுச்சு, என எழுதி வைத்து விட்டு வந்தால் ஒன்னு அல்லது இரண்டு தினங்களில் லைன் மேன் வந்து அந்த பிரச்சனையை சரி செய்வார்.

நிச்சயம் நம்ம பிரச்சனை சீக்கிரம் சரி செய்யமாட்டாங்க. எப்படியும் ஒரு நாளாவது டைம் எடுத்துக்குவாங்க. லஞ்சம் கொடுத்தால் தான் சில இடங்களில் வேலையே செய்ய ஆரம்பிப்பார்கள். 

இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஒரு எளிமையான வழி இருக்கு. 9498794987 என்ற எண்ணுக்கு போன் செய்து உங்கள் மின் இணைப்பு எண்ணை சொல்லி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று புகார் அளிக்க வேண்டும்.

(getCard) #type=(post) #title=(You might Like)

அடுத்த 5 நிமிடத்தில் உங்கள் மாவட்ட மின்சார வாரியத்தில் இருந்து உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள். 

அடுத்த அஞ்சு நிமிடத்தில் உங்கள் ஏரியாவை சேர்ந்த மின்சார ஊழிய தலைமை அதிகாரி உங்களுக்கு போன் பண்ணி பேசுவார். 

அடுத்த அரை மணி நேரத்தில் லைன் மேன் நேரடியாக உங்க வீட்டுக்கு வந்து உங்க பிரச்சனையை சரி செய்து கொடுப்பார்.

உங்கள் பிரச்சனை முடிந்தவுடன் உங்களிடம் எதுவும் கேட்காமல் லஞ் சம் பற்றி எதுவும் பேசாமல் லைன் மேன் அவர் வேளையை முடித்து விட்டு கிளம்பி விடுவார். 

மீண்டும் சென்னையில் இருந்து உங்களுக்கு போன் வரும், அப்போது உங்கள் பிரச்சனை தீர்ந்ததா வேறு ஏதேனும் சேவை உங்களுக்கு தேவையா என்று கேட்பார்கள். 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இந்த மாதிரியான ஒரு சேவை இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. 

கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் செய்வதற்குரிய அறிகுறி !

முடிந்தவரை இந்த முறைப்படி நீங்கள் புகார் அளித்தால் சில மணி நேரங்களிலேயே உங்க பிரச்சனை தீர்ந்து விடும். யாருக்கும் லஞ்சம் கொடுக்கணும்ன்னு அவசியம் இல்ல.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings