7 வயது சிறுவன் 496 படிக்கட்டுகளை தலைகீழாக ஏறி சாதனை !

0

திருச்சி மாவட்டம், சங்கிலிஆண்டபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேஷ் (37). கூலி தொழிலாளி. இவரது 7 வயது மகன் பத்மேஷ்சாய்தேவ்.

7 வயது சிறுவன் 496 படிக்கட்டுகளை தலைகீழாக ஏறி சாதனை !

தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சக்கராசனம் என்ற முறையில் தலைகீழாக மாடி படியேறும் பயிற்சி பெற்று வந்தார். 

கடந்த மாதம் திருச்சி மலைக் கோட்டையில் சக்கராசனம் முறையில் 45 நிமிடத்தில் 410 படிகளை உடலை பின்புறமாக முற்றிலும் வளைத்து கையை கொண்டு ஏறி சாதனை படைத்தார். 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

அதன் தொடர்ச்சியாக நேற்று திருப்பூர் மாவட்டம், சிவன்மலை கோயிலில் உள்ள 496 படிக்கட்டுகளை 35 நிமிடங்களில் ஏறி சோழன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)