ரவீந்திரனும் மகாலட்சுமியும் பிரிந்து விட்டார்களா?

0

தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமி இருவரும் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் மகாலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீந்திரனும் மகாலட்சுமியும் பிரிந்து விட்டார்களா?
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக ரவீந்திரன் சந்திரசேகர் கடந்த ஆண்டு திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றோம்... நடிகை உருக்கம் !

நெட்டிசன்கள் ஒருசிலர் ரவீந்தரை கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தாலும், அதை யெல்லம் கண்டு கொள்ளாத தம்பதி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடந்து சென்று கொண்டிருந்தனர். 

இடையில் மகாலட்சுமிக்கு பல சுவாரஸ்யமான கிஃப்ட்களை கொடுத்து மகிழ்ந்த ரவீந்தர் அவ்வப்போது தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இதனால் ரவீந்தர் – மகாலட்சுமி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமீப காலமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரியப் போவதாக தகவல் வெளியானது. 

இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவர்கள் பிரிவுக்கு இதுதான் காரணம் என்பது பொல் பல கருத்துக்களை கூறி வந்தனர்.

அதற்கு ஏற்றார்போல் சமீப நாட்களாக ரவீந்தர் தான் தனியாக இருக்கும் புகைப்படங்களையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இதன் காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், நாங்கள் இருவரும் பிரியவில்லை என்பதை உணர்த்தும் வகையில் தற்போது மகாலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ரவீந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  டேய் புருஷா இன்ஸ்டாகிராமில் உனது தனிப் படத்தைப் பதிவேற்ற வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லி யிருக்கிறேன். 

டேஸ்டியான நெல்லிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?

நீ இப்படி பதிவிடுவதால் தான் நாம் பிரிந்துவிட்டோம் என்று சமூகவலை தளங்களில் கூறி வருகின்றனர். 

மவனே இனிமேல் இந்தத் தவறை மீண்டும் செய்தால் எனக்கு பிடித்த சேமியா உப்மா 3 வேளை உணவாக எப்போதும் உனக்கு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சேமியாக உப்மா குறித்து ரவீந்திரன் – மகாலட்சுமி இடையே உரையாடல் தொடங்கியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings