கடல் நீர் சுத்திகரிப்பில் உள்ள சில உண்மைகள் !

0

சென்னை அருகே திருவள்ளூர் - மீஞ்சூரில் செயல்படும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கிறது. 

கடல் நீர் சுத்திகரிப்பில் உள்ள சில உண்மைகள் !
இந்தியாவின் மிகப் பெரிய நன்னீராக்கல் நிறுவனம் இது. அடுத்த பெரிய நிறுவனம், நெம்மேலியில் இயங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம். 

தண்ணீர் பற்றா குறையால் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம். சரி, உண்மையிலேயே கடல் நீர் சுத்திகரிப்பு என்பது சரி தானா? 

அதனால் விளையும் தீமைகள் என்னென்ன? என்பது குறித்து இதுவரை பெரியதாக பேசப்படாத நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் சூழலியாளர்கள். 

சிறார் ஆபாச படம் பார்ப்பது 95% அதிகரிப்பு - நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !

கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், அதில் மனிதனுக்கு நன்மை செய்யும் எந்தக் கனிமங்களும் நுண்ணுயிர்களும் இல்லை. 

எனவே, அந்தத் தண்ணீரை குடிப்பதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியா விட்டாலும் அதனால் உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது. 

நன்னீராக்கல் நிலையங்களை அமைக்கும் போது இடத்தை தேர்வு செய்வதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கடல் உயிரின பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என்கிறது கலிஃபோர்னியா கடலோரக் கமிஷன். 

கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும் போது அதில் ஆயிரக் கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. 

தவிர, ப்ளாங்க்டான், லார்வா, மீன் முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப் படுகின்றன. 

கடல் நீர் சுத்திகரிப்பில் உள்ள சில உண்மைகள் !

தொழிற்சாலைகளின் குழாய்கள், சாதனங்களை சுத்தப்படுத்த குளோரின் அல்லது உயிரி பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்து கிறார்கள். 

முதல் சுத்திகரிப்பில் நீரை உறைய வைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குளோரைடு, குழாய்களில் படிந்திருக்கும் உப்புப் படிமங்களை அகற்ற பயன்படுத்தப்படும் பாலி அக்ரிலிக் அமிலம், 

தண்ணீர் வடிகட்டி சவ்வுகளை சுத்தப்படுத்த உபயோகிக்கும் நீர்த்த அல்கலைன் அமிலம் மற்றும் சோடியம் சல்பைடு போன்றவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?

அப்படி திட்டம் மிக அவசியம் என்றால் கடலில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சாமல் தீவுப் பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சினால் நீரின் உப்புத் தன்மையும் குறையும். திட்ட செலவும் குறையும். 

ஆனால், கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றார். 

ஒருங்கிணைந்த கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலு கூறுகையில், கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவும் 200 மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன் வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்துக் கொண்டே இருக்கும். 

நெம்மேலி, மிஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை மேல் மட்டத்திலேயே உறிஞ்சுகின்றனர். கழிவையும் அவ்வாறே விடுகின்றனர். 

இதனால் மேற்பகுதியில் 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கும் உயிரினங்கள் பாதிக்கப் படுகின்றன. தவிர, மிக முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கப் படுகிறது. 

பூமி ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்து 300 கி.மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. அந்த வேகத்தை சீராக வைத்திருப்பவை கடலின் நீரோட்டங்களே. 

ஆனால், கடலில் நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதும் செலுத்துவதும் கடலின் நீரோட்டங்களை பாதிப்படைய வைத்துள்ளது. 

கடல் நீர் சுத்திகரிப்பில் உள்ள சில உண்மைகள் !

உப்புத் தன்மை அதிகமான கழிவை கடலில் கொட்டுவதால் உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும் கூட இடம் பெயர்ந்து விடும் அல்லது அதன் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைந்து விடும். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும் எடையும் இப்போது பாதியாகக் குறைந்து விட்டது. 

சென்னை கடல் பகுதிக்கு நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, பெரு, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய பகுதிகளில் இருந்து பங்குனி எனப்படும் ரெட்லி ஆமைகளும் பச்சை ஆமைகளும் இனப்பெருக்கத்துக்காக வரும். 

விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் !

ஆனால், மேற்கண்ட பாதிப்புகளால் இந்த ஆண்டு ஆமைகள் வரத்து மிகவும் குறைந்து விட்டது. வந்த ஆமைகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப் படுகின்றன என்றார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings