நடுரோட்டில் பிறந்தநாள்... மாணவி மேல் கேக் தடவிய இளைஞர்கள் !

0

கோவை குனியமுத்தூர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார்.

நடுரோட்டில் பிறந்தநாள்... மாணவி மேல் கேக் தடவிய இளைஞர்கள் !
அப்போது 4 இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி யுள்ளார். அந்த வழியாக  செண்ற மாணவியின் கன்னத்தில் திடீரென கேக்கை தடவி யுள்ளனர். 

இதனை தடுத்த மாணவி ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

உங்கள் உடலில் அழுக்கான இடம் எது தெரியுமா? தெரிஞ்சிகோங்க !

இதனை யடுத்து இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ( 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். 

மேலும் அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)