ஆபாச வீடியோ பார்த்ததால் மனைவி எரித்துக் கொலை !

0
குஜராத் மாநில சூரத் பகுதியில் கிஷோர் (35) - காஜல் (25) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். 
ஆபாச வீடியோ பார்த்ததால் மனைவி எரித்துக் கொலை !
திருமணத்துக்கு பிறகு தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பிறகு குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனை உண்டானது.
மேலும் கிஷோர் தனது மனைவியை கட்டாயப் படுத்தி இயற்கைக்கு மாறான முறையில் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது, ஆபாச படங்களில் வருவது போல் உறவு கொள்ள கட்டாயப் படுத்தியதாக தெரிகிறது. 

இதற்கு காரணம் கிஷோர் அடிக்கடி தனது செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்ததே காரணம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் சம்பவத்தன்றும் கிஷோர் ஆபாச படங்கள் பார்த்துள்ளார். இதனை அறிந்த மனைவி காஜல் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது. 

இதில் ஆத்திரமடைந்த கிஷோர், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். மனைவி தீப்பிடித்து எரிந்து அலறியுள்ளார். 

இதனை பார்த்ததும் வேதனை அடைந்த கிஷோர், ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததை உணர்ந்து தீயை அணைத்து மனைவியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால், அங்கு தனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயன்று தீக்குளித்து கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காஜலிடம் வாக்குமூலம் பெறும் போது அவர், தனது கணவர் எரித்ததை கூறி விட்டார்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி காஜல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கிஷோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)