திருநம்பி தாய்மை அடைந்து, தாயான திருநங்கை காதலி !

0
கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா இருவரும் தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளனர். 
திருநம்பி தாய்மை அடைந்து, தாயான திருநங்கை காதலி !
பெண்ணாகப் பிறந்து ஆணாக பாலினம் மாறும் சிகிச்சையில் இருந்த திருநம்பி சஹத், சிகிச்சையை இடைநிறுத்தி கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளார்.
 
சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் சில நாள்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாகி வந்தன. 
கேரள மாநிலம் கோழிக்கோடு - உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத் - ஜியா இருவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். 

இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. அதே போல், ஜியா பாவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.
 
காதலர்களான இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். 

குழந்தை மீதான ஆசையால் முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பிய இவர்கள், அதிலுள்ள சில சட்ட சிக்கல்களால் தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து மருத்துவரை அணுகியுள்ளனர்.
 
பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. 
இதனால், அவரால் மருத்துவ சிகிச்சையின் மூலம் கர்ப்பமாக முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜியா - சஹத் இருவருமே வேறு பாலினத்திற்கு மாறும் சிகிச்சையில் இருந்தாலும், அவை இன்னும் முழுமையாக முடிவடையாததால், சஹத் கர்ப்பமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, ஜியாவின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர்.
 
இந்த முறையில் சஹத் கர்ப்பம் அடைந்துள்ளார். சஹத்திற்கு இம்மாதம் (பிப்ரவரி) அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற உள்ளது. 

தங்கள் மகிழ்ச்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜியா, நான் பிறப்பாலோ அல்லது என்னுடைய உடலமைப்பாலோ பெண்ணாக இல்லா விட்டாலும், 

விக்ரம் எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் !

அம்மா என ஒரு குழந்தை அழைக்க வேண்டும் என்ற பெண்மைக்கே உண்டான கனவு எனக்குள் இருந்தது.
திருநம்பி தாய்மை அடைந்து, தாயான திருநங்கை காதலி !
நாங்கள் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. எனக்கு எப்படி அம்மா ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறதோ, அதே போன்று சஹத்திற்கும் அப்பா ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
 
இப்போது, அவருடைய வயிற்றில் எட்டு மாத உயிர் அவருடைய முழு ஒப்புதலுடன் அசைந்து கொண்டிருக்கிறது, என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். 
தங்களுக்குத் தெரிந்த வரை இந்தியாவிலேயே திருநம்பி ஒருவர் கர்ப்பமடைந்திருப்பது இதுவே முதன் முறை என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளார் ஜியா.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)