நடிகை ரோஜாவின் காலணி ஊழியரின் கையில்... புகைப்படத்தால் சர்ச்சை !





நடிகை ரோஜாவின் காலணி ஊழியரின் கையில்... புகைப்படத்தால் சர்ச்சை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் நடிகையான ரோஜா, கடற்கரையில் இறங்கிய போது ஊழியர் ஒருவர் அவரது காலணிகளை கையில் வைத்திருந்தது விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 
நடிகை ரோஜாவின் காலணி ஊழியரின் கையில்... புகைப்படத்தால் சர்ச்சை !
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, சமீபகாலமாகவே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 
இவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தற்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
 
இந்நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திர பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு சென்றார். அங்கு கடற்கரை மணலில் நடந்ததோடு, கடல் நீரில் கால் நனைத்து மகிழ்ந்தார். 

அப்போது ரோஜாவின் காலணிகள் அவரது வேலைக்காரரின் கையில் இருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சராக இருந்தாலும் அவரது ஊழியர் செருப்பு சுமப்பதை ஏற்க முடியாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இதனிடையே சூர்யலங்கா கடற்கரைக்கு சென்ற ரோஜா, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
மேலும் பாபட்லா சூர்யலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குவதாகவும், இந்தக் கடற்கரையை பொருளாதார ரீதியாக 
ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் !
முன்னேற்ற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் ரோஜா கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)