உன் பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது... இயக்குநர் குறித்து அனுஷ்கா பேச்சு !

0
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா 2008-ம் ஆண்டு வெளியான ரப் நே பனா தி ஜோடி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
உன் பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது...  இயக்குநர் குறித்து அனுஷ்கா பேச்சு !
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
 
பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வமிகா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் யாஷ் சோப்ரா மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பற்றிய தி ரொமாண்டிக்ஸ் என்கிற ஆவணப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி யுள்ளது.
 
இதனை தொடர்ந்து அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் யாஷ் சோப்ரா பற்றியும் 

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பற்றியும் அவர்கள் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பை பற்றியும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
உன் பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது...  இயக்குநர் குறித்து அனுஷ்கா பேச்சு !
அதில் அனுஷ்கா ஷர்மா கூறியதாவது, ஷாருக் கானுடன் இணைந்து ரப் நே பனா தி ஜோடி படத்தில் நடித்த போது அதன் இயக்குநர் ஆதித்யா சோப்ரா தன்னிடம் சில கண்டிஷன்கள் போட்டதாக தெரிவித்தார்.
 
ரப் நே பனா தி ஜோடி என்ற படத்தில் நான் ஷாருக் கானுக்கு ஜோடியாக அறிமுகமாவது குறித்து வெளியில் தெரியக்கூடாது என்றார். படம் பற்றி நீ யாரிடமும் மூச்சு விடக்கூடாது. 
ஏன் உன் பெற்றோரிடம் கூட சொல்லக் கூடாது என்று ஆதித்யா சோப்ரா கூறியதைக் கேட்டு ஆச்சரியப் பட்டேன் என்றும் அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)