அலுத்துப் போன காதல் மனைவி... அந்தரங்கம் விலகிய மர்மம் !





அலுத்துப் போன காதல் மனைவி... அந்தரங்கம் விலகிய மர்மம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை விஆர்பிநாயுடு தெரு பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் (40) ரம்ஜான் பேகம் (33). 
அலுத்துப் போன காதல் மனைவி... அந்தரங்கம் விலகிய மர்மம் !
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேடசந்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான துணிநுட்ப ஆலையில் வேலை பார்த்து வந்த போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாகமாரி திருமணத்தில் முடிந்தது. 
 
தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபூபக்கர் சித்திக்கும் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அப்பகுதியில் கூறப்படுகிறது. 

தொடை, பிட்டம், மார்பு போன்ற இடங்களில் கோடு வர காரணம்?

இந்நிலையில் நேற்றைய முன் தினம் அபூபக்கர் சித்திக் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் ரம்ஜான் பேகத்தை அபூபக்கர் சித்திக் அவரது கடை முன்பு பொதுமக்கள் மத்தியில் தாக்கியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து இரவு ரம்ஜான் பேகம் திடீரென உயிர் இழக்கவே அபூபக்கர் சித்திக் தனது மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக உறவினருக்கு தகவல் கூறி எல்லோரையும் வரவழைத்து அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடத்தினார். 
 
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ரம்ஜான் பேகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது.
 
இதனைத் தொடர்ந்து இத்தகவலை அறிந்த பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல் துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு 
இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
மேலும் பெரியகுளம் காவல்துறையினர் அபூபக்கர் சித்திக் கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று ரம்ஜான் பேகத்தின் இறப்பு, இயற்கை மரணமா? 
 
தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

துணையின் போலியான அன்பை சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ள !

இந்நிலையில், ரம்ஜான் பேகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், ரம்ஜான் பேகம் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
பின்னர் பெரியகுளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் அபூபக்கர் சித்திக்கிடம் துரித விசாரணை நடத்தினர். 
 
அதில், நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது அபூபக்கர் இரண்டு பெண் குழந்தைகளையும் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
 
அதனை அடுத்து, தனது உறவினரின் வீட்டில் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு 'நீங்கள் இங்கு இருங்கள், நான் வேரோரு விசேஷ வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. 
 
நான் போய் விட்டு மீண்டும் வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன்' என்று இரண்டு மகள்களிடம் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்ட அபூபக்கர் சித்திக், விசேஷ வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டிற்கே வந்துள்ளார்.
அப்போது தனது மனைவி ரம்ஜான் பேகத்திடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அபூபக்கர் சித்திக்கின் தாய் பாத்திமா (60) வீட்டில் இருந்துள்ளார். 
 
இவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டதை பார்த்து பொறுமை இழந்து வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர், 
உங்கள் தொப்புள் பற்றி அறிந்திராத தகவல் தெரிந்து கொள்ள?
ரம்ஜான் பேகத்தின் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்தததாக வாக்குமூலம் கொடுத்தார்.
 
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை காவல் துறையினர் ஒப்படைத்து நல்லடக்கம் செய்தனர். 
 
மேலும், ரம்ஜான் பேகத்தை கொலை செய்த கணவன் அபூபக்கர் சித்திக் மீது பல்வேறு குற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்
 
15 ஆண்டுகளுக்கு முன்பு அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் ரம்ஜான் பேகத்தை உயிருக்கு உயிராக காதலித்து காதலிக்காக இந்து மதத்தில் இருந்து 
 
முஸ்லிம் மதத்திற்கு மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகி யுள்ளார்.
 
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நடத்தி வருகின்ற மளிகை கடைக்கு வருகின்ற ஒரு சில பெண்களிடம் தகாத உறவுவைத்ததை தட்டி கேட்ட 
தனது மனைவி ரம்ஜான் பேகத்திடம் பல முறை தகராறில் ஈடுபட்டு தாக்கியதும் இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
 
அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும் தன் காதல் மனைவி மீது கொண்ட வெறுப்பால் காதல் மனைவியின் உறவை தூக்கி எறிந்து 
 
ரம்ஜான் பேகத்தை கொலை செய்து நாடகமாடி இருப்பது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

மேலும் பலசரக்கு கடை நடத்தி வந்த அபூபக்கர் சித்திக், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் தவறான வழியில் பல்வேறு பெண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டு 
 
பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஒரு சில இச்சைக்கு உட்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தும் வந்துள்ளார். 
 
மேலும், தனது வறுமையை கூறுவது போல் ஏமாற்றி ஆரம்பத்தில் கடனாக பணம் பெறுவது போல பல லட்சம் ரூபாய் பெற்று பல பெண்களை ஏமாற்றி பல குடும்ப பெண்களை சீரழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரம்ஜான் பேகம் உயிரிழப்பிற்கு காரணமான ஒரு சில பெண்களிடம் பெரிய குளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)