மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க டிச.31 கடைசி தேதி !

0

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இம்மாதம் 28-ம் முதல் டிசம்பர் 31-ம் வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க டிச.31 கடைசி தேதி !
குறிப்பாக, டிசம்பர் 31 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின் படி செலுத்தலாம். 

அதற்கு எவ்வித இடையூறும் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி... 

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் இணைப்பு எண்ணை 

அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும், 

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் 

வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா? படிங்க !

பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.

பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. 

31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின் படி செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)