நாளை இரவு வானில் தோன்றும் சூப்பர்மூன்... இந்தியாவில் தெரியுமா?

0

2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர்மூன் 13ம் தேதி இரவு வானில் தோன்றும். இந்த சூப்பர்மூனுக்கு பக்சூப்பர்மூன் (buck suprmoon) அல்லது, தண்டர்மூன் (Thunder moon) அல்லது ஹே அல்லது மெட்மூன் என்று அழைக்கப்படுகிறது.

நாளை இரவு வானில் தோன்றும் சூப்பர்மூன்... இந்தியாவில் தெரியுமா?

பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நிலவு வரும் போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமிகோளுக்கு அருகே நிலவு வரும் போது, வழக்கத்தை விட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.

சூப்பர் மூன் எப்போது பார்க்கலாம்?

நாளை இரவு வானில் தோன்றும் சூப்பர்மூன்... இந்தியாவில் தெரியுமா?

நாசாவின் அறிக்கையின்படி, 2022, ஜூலை 13ம் தேதி புதன்கிழமை பிற்பகலில் இருந்து சூப்பர்மூன் வெளிப்படும். சூரியனுக்கு எதிராக வெளிப்பட்டு பூமிக்கு நிலவு காட்சியளிக்கும். 

கடந்த மாதம் சூப்பர்மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர்மூன் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை.

வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? தெரிந்து கொள்ளூங்கள் !

ஆனால், இந்த சூப்பர் நிலவை இந்தியாவில் வியாழக்கிழமை (நள்ளிரவு 1மணி) அதிகாலையிலிருந்து பார்க்க முடியும். நாசாவின் கணக்கின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வானில் இருக்கும்.

சூப்பர்மூன் என்றால் என்ன?

நாளை இரவு வானில் தோன்றும் சூப்பர்மூன்... இந்தியாவில் தெரியுமா?

சூப்பர்மூன் என்பது, நிலவு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது சூப்பர்மூன் தோன்றும். 

அப்போது, வழக்கத்தை விட நிலவு அளவில் பெரிதாகவும், ஒளி அதிகமாகவும் இருக்கும். சூப்பர்மூன் என்பது அதிகாரபூர்வப் பெயர் இல்லை. 

நாளை வரும் சூப்பர்மூன், பூமியிலிருந்து 3லட்சத்து 57ஆயிரத்து 264கி.மீ தொலைவில் தெரியும்.

கடந்த மாதம் வந்த ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் பூமியிலிருந்து 3,63,300கி.மீ தொலைவில் இருந்தது. 

ஆனால் நாளை தோன்றும் பக்சூப்பர்மூன், ஏறக்குரைய 6ஆயிரம் கி.மீ குறைவாக பூமிக்கு அருகே வருவதால், வழக்கத்தை விட பெரிதாக நிலவு தோன்றும்

ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்?

கடந்த 1979ம் ஆண்டு ரிச்சர்ட் நோலே எனும் வானியல் நிபுணரால் வைக்கப்பட்ட பெயராகும்.

சூப்பர்மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை வரை தோன்றலாம். சூப்பர்மூன் வழக்கத்தை விட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.

சூப்பர்மூன் மற்ற நாட்களில் வரும் நிலவைவிட சற்று தான் பெரிதாக இருக்கும், ஆனால் ஒளி அளவில் அதிகான ஒளிவீச்சை வழங்கும். 

இந்த சூப்பர்மூன் வரும் காலத்தில் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பு, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அடுத்த சூப்பர்மூன் எப்போது?

நாளை இரவு வானில் தோன்றும் சூப்பர்மூன்... இந்தியாவில் தெரியுமா?

2022ம் ஆண்டில் ஏற்கெனவே ஒரு சூப்பர்மூன் வந்து விட்டது, நாளை 2-வது சூப்பர்மூன் வர உள்ளது. 3-வது சூப்பர்மூன் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன் பின் 2023 ஜூலை 3ம் தேதி  சூப்பர்மூன் வரும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)