43 வயது பெண்ணுடன் 6 மாதம் வாழ்க்கை நடத்தி பெற்றோருடன் சென்ற மாணவர் !

0

கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறி தள்ளி விட்டு கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய 43 வயது பெண்ணை 6 மாதத்திற்கு பிறகு திருச்சியில் போலீசார் மீட்டனர். 

43 வயது பெண்ணுடன் 6 மாதம் வாழ்க்கை நடத்தி பெற்றோருடன் சென்ற மாணவர் !

இது பற்றி போலீஸ் தரப்பில கூறியதாவது:- நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 43 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவரும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

வெண்ணெய் சேர்த்து சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். 

இதற்கிடையே மாணவரும், 43 வயது பெண்ணும் பழகி வந்த விவகாரம் அரசல்புரசலாக இருவரின் வீட்டுக்கும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரின் வீட்டிலும் அவர்களை கண்டித்துள்ளனர். 

இதன் காரணமாக கள்ளக்காதலர்களால் சந்திக்க முடியாமல் போனது. இதனால் ஏமாற்றம் அடைந்த இருவரும் கடந்த 12-2-2021 அன்று வீட்டை விட்டு வெளியேறினர். 

உறவினர்கள் எங்கு தேடியும் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2 வீட்டாரும் தனித்தனியாக ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலர்களை தேடி வந்தனர். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் கள்ளக்காதலர்கள் 2 பேரும் திருச்சியில் வசித்து வந்தது போலீசுக்கு தெரியவந்தது. அதாவது வீட்டை விட்டு வெளியேறிய 2 பேரும் நேராக திருச்சி சென்றுள்ளனர். 

அங்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவியை போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

மாணவர் தினமும் வேலைக்கு சென்று பணம் கொண்டு வருவதும், அதை வைத்து குடும்பம் நடத்துவதும் என மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். 

ஆனால் கள்ளக்காதலர்களின் 6 மாத கால குடும்ப வாழ்க்கையில் கசப்பு தட்டிவிட்டது. எனவே கல்லூரி மாணவர் கள்ளக்காதலியை விட்டு பிரிய முடிவு செய்தார். 

உயிரை பறிக்கும் இந்த ஷிகெல்லா வைரஸ் என்ன செய்யும்? அறிகுறிகள் என்ன? 

அதைத் தொடர்ந்து அவர் உடனே தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தான் திருச்சியில் இருப்பதாகவும், தன்னை அழைத்து செல்லும் படியும் கூறியுள்ளார். 

உடனே மாணவரின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் போலீசார் உடனடியாக திருச்சி சென்று 2 பேரையும் மீட்டனர். 

பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வைத்து மாணவர் தான் பெற்றோருடன் செல்ல போவதாக கூறினார். 

அதன்படி அவரை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் 43 வயது பெண்ணை அழைத்து செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே அந்த பெண்ணை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். 

கள்ளக் காதலனுக்காக கணவர் மற்றும் பிள்ளைகளை உதறி தள்ளி விட்டு சென்ற பெண்ணை அவர் குடும்பத்தினரும் உதறித்தள்ளி விட்டனர். அதைத்தொடர்ந்து அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)