குழந்தை பெற்ற மனைவியின் அரை நிர்வாண போட்டோவை ஷேர் செய்த கணவன் !

0

பிள்ளை பெற்றெடுத்த மனைவியின் அரை நிர்வாண லைவ் போட்டோவை குடும்பத்தோடு பகிர்ந்த கணவன். புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல்வேறு எதிர் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

குழந்தை பெற்ற மனைவியின் அரை நிர்வாண போட்டோவை ஷேர் செய்த கணவன் !

இந்நிலையில் சம்மந்தப்பட்ட பெண் சமந்தா இது குறித்து இணையத்தில் விளக்கம் அளித்து  வாழ்க்கையின் மோசமான விஷயமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று உருக்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆண்களால் அதை செய்ய முடியுமா? எனவே பெண்களை மதியுங்கள் என்று பல ஆண்கள் சொல்ல கேட்டிருப்போம். 

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

ஆனால் அந்த ஆண்களுக்கு கூட குழந்தைப் பெற்றெடுத்தலின் வலி தெரியாது என்பதே நிதர்சனம்.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு தனக்குள் ஒரு குட்டி போர் புரிந்து குழந்தைகளை பெற்றெடுப்பது பெண்களுக்கு பெரும்பாடு. 

குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன் பேறு காலத்திலும் சரி, அதற்கு பின் குழந்தை பிறந்து சிறிது காலத்திற்கும் பெண்களுக்கு கட்டாய ஓய்வு என்பது அவசியம்‌. 

அந்த சமயத்தில் தான் இழந்த மன உறுதி முதல் உடலுறுதி வரை பெற முடியும். ஆனால் பாவம் சமந்தா பார்லோ அந்த பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை. 

சமீபத்தில் @samanthabarlow863 என்ற டிக்டாக் கணக்கில் சமந்தா என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சமீபத்தில் அவர் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்திருந்தார்‌. 

அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து அவர் சோர்வாக இருந்த சமயத்தில் குழந்தைக்கு அருகில் இருந்த தன் கணவரிடம் கொடுத்துள்ளார்.

போலியோ மருந்து கண்டுபிடித்தவர் விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி !

அந்த குழந்தையை கணவர் படம் எடுக்க முயற்சிக்க போய் அந்த புகைப்படம் லைவ் போட்டோவாக வந்து விட்டது‌. லைவ் போட்டோ என்பதால் 

குழந்தை படத்தோடு சேர்த்து அறுவை சிகிச்சைக்காக அரை நிர்வாணமாக இருந்த சமந்தாவின் உடல் மற்றும் முகமும் தெரியும் படி புகைப்படம் வந்து விட்டது. 

ஆப்பிள் மொபைலில் பார்த்தால் இந்த போட்டோ வீடியோவாக வரும். அதில் சமந்தா அரை நிர்வாணமாக இருப்பதும் காலை விரித்துக் கொண்டு ஒரு கழுகு படுத்திருப்பது போலவும் தெரிகிறது.

இதை அறியாமல் அவரின் கணவர் தன்னுடைய அம்மாவிற்கு அந்த போட்டோவை பகிர, உடனே அவரும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் குரூப்பில் அதை பகிர்ந்து விட்டார். 

அந்த போட்டாவில் சமந்தாவின் ஒரு சில உடல் பாகங்களும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த தையல் போடப்பட்ட இடமும் இறுதியில் அவரது முகமும் தெரிகிறது. 

குழந்தை பெற்ற மனைவியின் அரை நிர்வாண போட்டோவை ஷேர் செய்த கணவன் !

இந்த விஷயத்தை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு தன் வாழ்நாளில் இது ஒரு மோஷமான தருணம் இது என்றும் கூறியிருக்கிறார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. 

நெட்டிசன்கள் பலரும் நானாக இருந்தால் இனி என்னுடைய குடும்ப விழா எதற்கும் செல்ல மாட்டேன் எனவும், 

ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?

நானெல்லாம் என்னுடைய படங்களை யாராவது பகிர வேண்டுமெனில் முதலில் என்னிடம் காட்டி அனுமதி வாங்கிவிட்டே பகிர வேண்டுமென கண்டிப்பான ரூல் போட்டு விடுவேன் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)