பள்ளியில் சேர்ந்த முதல் நாளே சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன் !

0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளியில் சேர்ந்த முதல் நாளே, பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளே சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன் !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு விக்னேஷ், சர்வேஷ்(4) என 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில், சிறுவன் சர்வேஷை, நேற்று வாழைப்பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

பள்ளி முடிந்து மாலை, சர்வேஷ், பள்ளி வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். கொருக்காத்தூர் அரசுப் பள்ளி அருகே வாகனத்தில் இருந்து சர்வேஷ் இறங்கி உள்ளார். 

அவர் இறங்குவதற்கு முன்பாகவே ஓட்டுநர் தமிழ்செல்வன் வேனை நகர்த்தியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த சர்வேஷ் தலையின் மீது வேனின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. 

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரணமல்லூர் போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து பள்ளி உரிமையாளரும், வேன் ஓட்டுநருமான தமிழ்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். 

பேருந்தில் உதவியாளர் இல்லாததே விபத்திற்கான காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings