கிச்சனில் CCTV வைத்த கணவனுக்கு தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை !

0

சுமார் 7 வருடங்களாக தன் கணவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் மனைவி செய்து வந்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிச்சனில் CCTV வைத்த கணவனுக்கு தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை !

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் சங்கர் ஐஸ்கீரிம் வியாபாரம் செய்து வருகிறார். 

இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆஷா என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சதீஷ் தினமும் இரவு உணவு அருந்தியவுடன் தூக்கம் வந்து விடுமாம், அதோடு உடல் சோர்வும் இருந்துள்ளது. 

சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார. 

உடல் வலியில் இருந்து நிவாரணம் தரும் கண்டதிப்பிலி ரசம் ! 

இருந்தாலும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். இந்த பிரச்சனை சுமார் 7 வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு நாள் சாப்பிட்டுள்ளார். ஆனால், அன்று அவருக்கு உடல் சோர்வோ அல்லது துக்கம் சீக்கிரம் வரும் பிரச்சனை ஏற்படவில்லை. 

இதனை கவனித்த சதிஷ், சுமார் 20 நாள் வீட்டில் சாப்பிட வேண்டாம் என முடிவு செய்து வெளியில் சாப்பிட்டு வந்துள்ளார். 

அப்போது தான் அவருக்கு வீட்டு சாப்பாட்டில் தான் ஏதோ பிரச்சனை உள்ளது என உணர்ந்துள்ளார்.

இதனால் தன் வீட்டு சமையலறையில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க தொடங்கியுள்ளார். 

கிச்சனில் CCTV வைத்த கணவனுக்கு தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை !

அப்போது தான் அவரின் மனைவி உணவில் எதோ ஒரு திரவத்தை கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மனைவி உணவில் தூக்க மாத்திரை கலந்துக் கொடுக்கிறாரா என்ற சந்தேகம் அடைந்த சதிஷ், உடனடியாக தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்சனைகளை கூறியுள்ளார். 

அதோடு, என் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார். 

வத்தல் பிரியாணி செய்வது எப்படி?

அப்போது தான் ஆஷா தன் கணவர் சதிஷிற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. 

அது மட்டுமில்லாமல், தோழியின் கணவருக்கும் இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்ததோடு, இதனை கொடுத்தால் தான் கணவன் நம் சொல்படி இருப்பார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இந்நிலையில், சதீஷ் தன் மனைவி மீது பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது, தன் கணவர் சதிஷ் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் செக்ஸ் டார்சர் கொடுத்தார். வீட்டில் எப்போதும் கடுமையாக நடப்பார். 

கிச்சனில் CCTV வைத்த கணவனுக்கு தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை !

அவரது கொடுமைகளை பொறுக்க முடியாமல் மனநலம்  பாதிப்புக்கு பயன்படுத்தும் மாத்திரையை கொடுத்தேன். என குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதோடு, ஆஷா தன்னுடைய மூத்த மகளிடம், அப்பா இந்த மருந்தை சாப்பிட்டால் தான் கடுமையாக நடந்துக் கொள்ள மாட்டார். 

பொரி சாட் மசாலா தயார் செய்வது எப்படி?

அவர் நோயில் இருந்து குணமாக இந்த மருந்தை கொடுப்பதாக கூறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)