பேண்ட்டை மாத்திட்டு வரேன்னு சொன்னார், விடல... ஜெயக்குமாரின் மனைவி !

0

காவல் துறையினரிடம் இருந்து தனது கணவரை பத்திரமாக மீட்டுத் தருமாறு ஜெயக்குமாரின் துணைவியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேண்ட்டை மாத்திட்டு வரேன்னு சொன்னார், விடல... ஜெயக்குமாரின் மனைவி !
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. 

இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்ததாக 

திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 47(கலகத்தில் ஈடுபடுதல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்), 294(பி) (ஆபாசமாக திட்டுதல்), 153 (கலகம் செய்ய தூண்டி விடுதல்), 

355 (தாக்குதலில் ஈடுபடுதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல்),  

தொண்டை அடைப்பான் (Diphtheria) நோய் !

506(2) கொலை மிரட்டல் மற்றும்  பொதுசொத்தை சேதப்படுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தனிமனிதனை கைது செய்ய இத்தனை காவல்துறையினர் படையெடுப்பதா? தனது காற்சட்டையை (pant) மாற்றி விட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

ஆனால், அதற்கு கூட காவல்துறையினர் கால அவகாசம் கொடுக்க வில்லை. பெரிய பெரிய அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர். சரியாக, யார் யாரென்று எனக்குத் தெரியவில்லை. 

எனது கணவரிடம் சில ஆவணங்களை அளித்தனர். வழக்குப்பதிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அவர்களும் பதில் அளித்தனர். 

எனது கணவரை எங்கு கொண்டு சொல்கிறார்கள் என்ன செய்ய போகிறார்கள்? போன்ற எந்த தகல்வகளும் எங்களிடம் இல்லை. 

மோடி தமிழின் பெருமையை பேசுவது ஏன்?

அது தான் எங்களை கவலையடைய  செய்கிறது. பயமுறுத்துகிறது. எனது கணவர் நன்றாக இருந்தால் போதும். பத்திரமாக வீட்டுக்கு வர வேண்டும். 

பத்தரிக்கையாளர்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.   

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)