100 வயதில் மனைவியை திருமணம் செய்த தாத்தா... புரிலயா படிங்க !

0

100 வயது தாத்தா ஒருவர் தனது 90வயது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் பாமுனியா கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்க்கார். 

100 வயதில் மனைவியை திருமணம் செய்த தாத்தா... புரிலயா படிங்க !
இவரது மனைவி சோரோத்வாணி சர்க்கார், இதில் பிஸ்வநாத்திற்கு 100 வயதாகிறது, சோரோத்வாணிக்கு 90 வயதாகிறது. 

இந்த தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள் 23 பேரக்குழந்தைகள், 10 பூட்ட குழந்தைகள் இருக்கின்றனர். 

கையூட்டு கேட்டதால் பாலியல் வன்கொடுமை !

இந்நிலையில் பிஸ்வநாத்திற்கு 100 வயதான நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த தம்பதிக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். 

அவர்களது மருமகள் இப்படியாக ஒரு விஷயத்தை சமூக வலைத்தளங்களில் காண அதே போல இவர்களும் செய்ய ஏற்பாடுகளை செய்தார். 

எங்கு வழக்கமாக பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என பிரிந்து பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்யும் அப்பகுதி மக்களிடம் உள்ள எல்லா சடங்குகளும் செய்யப்பட்டன. 

இந்த விழாவில் அந்த குடும்பத்தினர் அனைவரும் மொத்தமாக கலந்து கொண்டனர். திருமணத்தின் போது 100 வயது மணமகன் வேஷ்டி மற்றும் குர்தாவும் மணமகள் சேலையும் கட்டியிருந்தனர். 
குட்டி போட்ட பனிப்பாறை - 50 ஆண்டுகளில் அதிசயம் !

இந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மிகப்பெரிய விருந்தும் அளிக்க்பட்டது. 

தங்களது தாத்தா பாட்டி திருமணத்தை பேரன் பேத்திமார்கள் கண்டு ரசித்து அவர்களிடம் ஆசிர்வாதமும் பெற்றனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)