16 வயது சிறுமியை காதலித்து விஷம் கொடுத்த இளைஞன் !

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 

16 வயது சிறுமியை காதலித்து விஷம் கொடுத்த இளைஞன் !
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சம்பவங்களும், கடத்திச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் கடந்த மாதத்தில் சராசரியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமூக விலகலால் அதிகரிக்கும் இதய நோய்க்கான அபாயம் தெரியுமா?

குறிப்பாக பள்ளி சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளும் அவல நிலை அதிகரித்து வருகிறது. 

இது குறித்து உரிய கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க பள்ளிக்கல்வி துறைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 16 வயது சிறுமியை காதலித்த ஜேசிபி ஆப்பரேட்டர் அவரது வீட்டில் 

பெண் தராததால் சிறுமியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே செவல்குளம் காலனி தெருவைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவரது மகன் ஆன 

கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks

22 வயது இளைஞர் வேல்முருகன் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வேல்முருகன் அதே கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த சிறுமியுடன் வேல்முருகன் பல இடங்களில் சுற்றித் திரிந்து உள்ளார். 

செல்போன் வாட்ஸ் அப் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன் அவரது பெற்றோரிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார் 

இதயத்தை பலப்படுத்தும் அன்ன முன்னா பழம்... சீதாப்பழம் ! #CustardApple

ஆனால் சிறுமிக்கு 16 வயது நடப்பதால் தற்போது திருமணம் செய்து தர முடியாது என அவரது பெற்றோரும் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அன்று மாலை சிறுமியை தனியே அழைத்துச் சென்ற வேல்முருகன் தான் விஷம் குடித்த தோடு சிறுமிக்கும் விஷத்தை ஊற்றி உள்ளார் 

இதில் இருவரும் மயங்கி கிடந்த நிலையில் அருகில் இருந்தோர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

16 வயது சிறுமியை காதலித்து விஷம் கொடுத்த இளைஞன் !

அங்கு இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, 

விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக சிறுமியின் தாய் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகார் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !

16 வயது சிறுமியை திருமணம் செய்து தர மறுத்ததால் சிறுமிக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)