ஜன.2 வரை பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை... தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை !

0

தமிழகத்தில் ஜன.2 வரை அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 

ஜன.2 வரை பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை... தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை !
அதைமீறி பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை 

வழங்கப்படுவதாக கடந்த வாரம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?

பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், 

தமிழக அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை உத்தரவைப் பிறப்பித்தது. 

எனினும், சில பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தற்போது விடுமுறை தினங்களில் சில பள்ளிகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. 

பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?

இது குறித்து அரசு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் 1 முதல் 12 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 

அரையாண்டு தேர்விற்காக டிசம்பர் 25-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

ஆனால், பல தனியார் பள்ளிகள், விடுமுறை நாட்களிலும், பள்ளி யூனிபார்ம் இன்றி, 

ஜன.2 வரை பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை... தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை !

சாதாரண உடையில் பள்ளிகளுக்கு வர மாணாக்கர்களை அறிவுறுத்தி உள்ளது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 

மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தின் விலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் தெரியுமா?

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்  உத்தரவிட்டுள்ளது. 

மேலும், விடுமுறை நாள்களில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தக் கூடாது என சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings