கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - ரணகளமாக்கிய மனைவி !

0

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தன் கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்த மனைவி. 

கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - ரணகளமாக்கிய மனைவி
அந்த வீடியோவில், ஒரு பெண் ஹோட்டலுக்கு முன்னால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் காரை நோக்கி ஓடுவது தெரிகிறது. 

அந்த பெண் அங்கு சென்றவுடன், காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை இழுத்து அடிக்க ஆரம்பித்தாள். 

காரில் இருந்த பெண்ணின் முகம் துப்பட்டாவால் மூடப்பட்டிருந்ததால், அதை அகற்ற முயன்ற பெண், தனது கணவரிடம், 'யே கவுன் ஹே' (இவ யாரு) என்று கத்துகிறார். 

இதற்கிடையில், அவரது கணவர், தனது மனைவியின் பிடியிலிருந்து தனது கள்ளக் காதலியை காப்பாற்ற தன்னால் முடிந்தவரை முயற்சி செகிறார்.

வீடியோவில் இருக்கும் காட்சியை பார்த்தால், காரில் அமர்ந்திருந்த ஆணும் பெண்ணும் அநேகமாக ஒரே ஹோட்டலுக்குள் செல்ல வந்ததாகத் தெரிகிறது. 

இதற்கிடையில், கணவன் மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த மனைவி, அவரைப் பின்தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க அங்கு வந்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீடே (giedde) என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

இந்த நாடகம் நடந்த போது, அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பலர் அந்த இடத்தில் கூடினர். பலர் அவரது மனைவிக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் அந்த பெண்ணை அடிப்பதற்கு பதிலாக கணவனிடம் மனைவி முதலில் காரில் அமர்ந்த்திருந்த பெண் யார்? 

என்று கேட்டிருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings