நேர்த்திக்கடன் செலுத்த சென்ற இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து !

0

நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அலகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து !
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். 

ஆனால் கொரோனா காரணமாக இந்தாண்டு பக்தர்கள் பிரசித்த பெற்ற கோவில்களில் தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்றப்ள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இதில் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த் ஆகாஷ் என்ற இளைஞர் உட்பட நான்கு நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதுவும் கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக் கொண்டு 40அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக வந்தனர். 

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி ஆகாஷ் மட்டும கீழே விழுந்தார். 

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

தான் கீழே விழுவதை உணர்ந்த அவர் தண்ணீரில் விழுவது போல தரையில் குதித்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

இந்த சம்பவத்தை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் இருந்து மற்ற மூன்று பேரும் கீழே இறங்கி நடந்து சென்று கோவிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து !

இது தொடப்ன காட்சிகள் அங்குள்ள மக்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள தடை விதித்துள்ள நிலையில், 

உடை இல்லாமல் ஆடையின்றி நிர்வாணமாக யோகா செய்யும் பெண் !

தடையை மீறி நேர்த்திக்கடன் செலுத்திய போது விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)