மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !

0

மூன்று பால்வெளிகளில் இருந்து, மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் (Super Massive Blackhole) ஒன்றிணைந்து, மூன்று மடங்கு தீவிரமான 

மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !
விண்மீன் மையப் பகுதியை (triple active galactic nucleus) உருவாக்கியுள்ளன என்பதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

கருந்துளை (Black Hole) என்றால் என்ன? 

விண்மீன், கோள்கள் போன்ற விண்பொருள் தான் கருந்துளை. விண்பொருளின் நிறை (Mass) அதிகமாக இருந்தால் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமாக இருக்கும். 

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம் !

அதாவது, குறிப்பிட்ட காலங்களில் ஒரு ஈர்ப்புப் பொருள் (உதாரணமாக, சூரியன்) ஈர்ப்பின் விளைவாகத் தானே வீழ்ச்சியடைத் தொடங்குகிறது. 

இவ்வாறு, சுருங்கி வரும் பொருளின் ஆரம் (Radius) சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திற்குள் (Schwarzschild radius) வரும் போது ஈர்ப்பினால் மிக வலிமையாக வீழ்ச்சி பெறப்பட்டுக் கருந்துளையாக மாறி விடுகிறது. 

கருந்துளை (Black Hole) என்றால் என்ன?

அதாவது, சூரியன் போன்ற விண் பொருளின் வீழ்ச்சிதான் கருந்துளையாக மாறுகிறது. 

தனது எல்லைக்குள் (Event Horizon) வரும் அனைத்து பொருள்களையும் கருந்துளை ஈர்த்து கொள்வதால், நம்மால் நேரடியாக கருந்துளையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. 

பாடிபில்டராக முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய சில உணவு !

ஏனெனில், கருந்துளைக்குள் சென்ற ஒளிகூட வெளியே வர முடியாது. 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரளின் மையப்பகுதி வழக்கத்தை விட பிரகாசமான பகுதியாக காணப்படுகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்தது.   

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது அருகில் உள்ள பிரபஞ்சத்தில் ஏற்பட்டுள்ள, இந்த அரிய நிகழ்வு, சிறியளவிலான  ஒன்றிணையும்,

விண்மீன் திரள் குழுக்கள் பல மடங்கு அதிசயமான கருந்துளைகளைக் கண்டறிய சிறந்த ஆய்வகங்களாக இருப்பதைக் குறிக்கிறது. 

மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !

இது போன்ற அரிய நிகழ்வுகளைக் கண்டறியும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 

விண்மீன் பரிணாமத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி விண்மீன்  திரள்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகும். 

பார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரை !

இது விண்மீன் திரள்கள் ஒன்றுக் கொன்று நெருக்கமாக நகர்ந்து ஒன்றுக் கொன்று  மிகப்பெரிய ஈர்ப்பு சக்திகளை செலுத்தும் போது நிகழ்கின்றன" என்று தெரிவித்தது.  

இது போன்ற விண்மீன் திரள்கள் தொடர்பின் போது, மிகப் பெரிய கருந்துளைகள்  ஒன்றுக் கொன்று அருகருகே வரலாம். 

இந்த இரட்டை கருந்துளைகள், தங்கள் சுற்றுப் புறத்திலிருந்து வாயுக்களை உட்கொள்ள தொடங்கி, தீவிர விண்மீன் திரள் மையப் பகுதியாகின்றன.

மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !

இரண்டு விண்மீன் திரள்கள் மோதினால், அவற்றின் இயக்க ஆற்றல், சுற்றியுள்ள வாயுவுக்கு மாறுவதன் மூலம் அவற்றின் கருந்துளையும் நெருங்கி வரும் என்று இந்திய வான் இயற்பியல் மைய (IIA) குழு விளக்குகிறது. 
மலை மீது பிளேபாய் நிர்வாண படம் எடுத்ததால் சர்ச்சை !

அப்போது இரு கருந்துளைகளுக்கு இடையேயான தூரம் குறைந்து, இயக்க ஆற்றலை மேலும் இழக்க முடியாமல், ஒன்றாக இணையும்.  

இது விண்ணியல் ஆரம்ப பிரச்சினை என அறியப்படுகிறது. மூன்றாவது கருந்துளை இப்பிரச்சினையை சரி செய்யும். 

இணையும் இரு கருந்துளைகள், தங்கள் ஆற்றலை மூன்றாவது கருந்துளைக்கு மாற்றி ஒன்றுடன் ஒன்று இணையும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)