தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்... இது தெரிஞ்சா !

0

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் 

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்... இது தெரிஞ்சா !
ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள். 

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும் போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். 

பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். 

ஆனால் சமீபகாலமாக வட இந்தியாவில் திருமணங்கள் திருமண நாள் என்று விதவிதமான காரணங்களால் வித விதமான நேரங்களில் நின்று போவது வாடிக்கையாகி விட்டது. 

தினம் ஒரு திருமணம் நின்று போகும் சம்பவம் நடந்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாக கடந்த இருவாரங்களாக இவ்வாறான செய்திகள் மிக அதிகமாக வருகிறது. 

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஒன்றொடு ஒன்று கலக்காமல் இருக்க காரணம் என்ன?

இந்நிலையில் இன்றும் திருமணம் ஒன்று வித்தியாசமான முறையில் பாதியிலேயே நின்ற சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்தில் திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

திருமணத்திற்கான அத்தனை சடங்குகளும் ஒவ்வொன்றாக நடந்தன. திருமணத்திற்காக மணமக்கள் மண்டபத்திற்கு வந்தனர். 

அதன் பின்னர் திருமணத்திற்கான சடங்குகள் வரிசையாக முறைப்படி நடந்து கொண்டிருந்தது. 

இதில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது, அக்னி குண்டத்தை சுற்றி வருவது என நிகழ்ச்சிகள் நடந்து அடுத்தாக மணமகன் மணமகளுக்கு நெற்றியில் குங்குமமிடும் சடங்கு நடக்கவிருந்தது.

கருவாடு எல்லாரும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்?

இந்த சடங்கிற்கு முன்னர் மணப்பெண் தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறியானார். 

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகளின் இந்த செயலை எதிர்பாராத பெற்றோர் அவரிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் உறவினர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். 

ஆனால் மணப்பெண் பிடிவாதமாக இருந்ததால் திருமணம் பாதியிலேயே இருந்தது.

சட்டு புட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் உறவினர் திருமணத்திற்கு ஆன செலவுகளை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். 

ஆனால் மணப்பெண் வீட்டாரிடம் காசு இல்லை என கூறினர். இதனால் விவகாரம் பெரிதானது. தற்போது போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)