ஆண் நண்பர்களே தன் பெண் நண்பியை பலாத்காரம் செய்த சம்பவம் !

0

பீச்சுக்கு வந்த பெண்ணை அவரின் ஆண் நண்பர்கள் மூவர் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ஆண் நண்பர்களே தன் பெண் நண்பியை பலாத்காரம் செய்த சம்பவம் !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ராவில் உள்ள பேண்ட்ஸ்டாண்டில் ஒரு 19 வயதான கல்லூரி மாணவி வசித்து வந்தார்.

அவர் அங்குள்ள கடற்கரைக்கு அடிக்கடி வருவார் .அதனால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரின் ஆண் நண்பர்களையும் அந்த பீச்சுக்கு அழைத்திருந்தார் .

அப்போது அந்த பெண்ணின் அழைப்பை ஏற்றுக் கொண்ட அந்த நண்பர்கள் மூவர் ஒரு பைக்கில் அந்த பீச்சுக்கு வந்தனர் .

பின்னர் அவர்கள் அந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென அவரை அங்குள்ள ஒரு பாறை பகுதிக்கு இழுத்து சென்றார்கள் .

பிறகு மூவரும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பைக்கில் தப்பி சென்று விட்டனர்.

மறுநாள் அந்த பெண் வயிற்று வலியால் துடிப்பதை பார்த்த அவரின் சகோதரி ,அவரிடம் விசாரித்த போது. அவர் மூன்று நண்பர்களால் பாலியல் பலத்காரத்துக் குள்ளான விஷயத்தினை கூறினார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சகோதரி, உடனே அங்குள்ள காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்.

பின்னர் அந்த ஆண் நணபர்கள் மீது, கோவாண்டியில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். 

பின்னர், அந்த மூன்று பேரும் ஐபிசியின் 376 டி பிரிவின் கீழ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்காக கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் புதன்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)