இறுதியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

0

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று இறுதியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இறுதியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
பல கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில் சில லட்சம் பேரிடம் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக வர முடியுமா என்றால் அறிவியல் ரீதியாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். 

அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை கனவு க்ளோஸ் - கோலி சொல்லும் லாஜிக் !

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று, இறுதி கருத்துக் கணிப்பை இன்று நடத்தப்பட்டது. 
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்

அவ்வாறு நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்துக் கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

50 ஆயிரத்திற்கும் அதிகமான நேயர்களிடம் ஆன்லைனில் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 41.5% வாக்குகள் பெற்றுள்ளது. 

பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?

அதிமுக கூட்டணி- 29%, நாம் தமிழர் கட்சி- 7.3%, மநீக- 6.4%, அமமுக கூட்டணி- 5.3%, மற்றவை- 10.6% வாசகர்கள் பெற்றுள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)