காலையிலேயே வாக்களித்த அஜித்.. ரசிகர்களுக்கு அட்வைஸ்.. போனை பிடுங்கிய அஜித் !

0

தமிழக சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் நடிகர் அஜித் அதிகாலையிலேயே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

காலையிலேயே வாக்கத்த அஜித்.. ரசிகர்களுக்கு அட்வைஸ்
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 

காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் 

இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். 

சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார். நடிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இந்த நிலையில்  திருவான்மியூரில் முதல் ஆளாக வந்து நடிகர் அஜித் வாக்களித்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

ஆனால் 6.30 மணிக்கே அஜித் நேரடியாக வந்து வாக்குச்சாவடி மையத்தில் லைனில் நின்றார். இவருடன் ஷாலினியும் வாக்களித்தார். 

ரசிகர்களையும், கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வந்து வாக்களித்து விட்டு சென்றார். கொரோனா காலம் என்பதால் இவர் காலையிலேயே வாக்களிக்க வந்தார். 

கையில் கிளவுஸ் அணிந்து மிகவும் பாதுகாப்பாகவே வாக்களிக்க வந்தார். 9 மணிக்கு மேல் வந்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அஜித்தை பார்க்க இதனால் பல கூடுவார்கள். 

இது கொரோனா பரவல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இன்று செல்பி எடுக்க வந்த ரசிகர்களையும் அஜித் தவிர்த்தார். 

ஆனாலும் அஜித் வந்ததை பார்த்து அங்கு இருந்த ரசிகர்கள் கூட்டமாக கூடினார்கள். இவர்களை தவிர்த்து விட்டு அங்கிருந்து எப்படியாவது கிளம்பி செல்லலாம் என்று அஜித் முயன்றார். 

ஆனால் வாக்குசாவடி மையத்திற்கு உள்ளே செல்லும் முன் அஜித்தை சுற்றி அவரின் ரசிகர்கள் பலர் நின்றனர். அஜித்தை நெறுக்கிக் கொண்டு பலர் அவரின் அருகிலேயே நின்றனர்.

கூட்டம் கூட வேண்டாம்,.. இது கொரோனா.. எல்லோரும் லைனில் நின்று வாக்களியுங்கள் என்று செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

போனை பிடுங்கிய அஜித் !

அஜித் உடன் இருந்த சில போலீசார் அதிகமாக கூட்டம் கூடாமல் பார்த்துக் கொண்டனர். போலீஸ் இருந்தும் கூட இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அப்போது அஜித் அருகே இருந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த அஜித் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அதன்பின் கோபமாக இருந்த அஜித் அருகில் இருந்த ரசிகர்களை கிளம்பி செல்லும்படி கூறினார். 

அஜித் பொது இடங்களில் இப்படி கோபமாக நடந்து கொண்டது இல்லை. இன்று அவர் நடந்து கொண்ட விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings